காங்கிரஸ் கட்சி முகமது அலி ஜின்னாவின் பாதையைப் பின்பற்றுகிறது

காங்கிரஸ் கட்சி முகமது அலி ஜின்னாவின் பாதையைப் பின்பற்றுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தேசத்தை அழித்துவிடும் என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்தார்.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத்தேர்தல் வரும் 27-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடக்கிறது. இந்தத்தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றத் தீவிரமாக முயன்றுவருகிறது. அதேசமயம் இழந்த ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போராடிவருகிறது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் திப்ருகார்க் மாவட்டம், நாகர்காட்டியா நகரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

”காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் வழிகாட்டுதல்களை, பாதையை, கொள்கைகளைப் பின்பற்றவில்லை. மாறாக, காங்கிரஸ்கட்சியும், ராகுல் காந்தியும் முகமது அலி ஜின்னாவின் வழிகாட்டுதல்களை, போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். ஜின்னாவின் கொள்கைகள் அசாமைமட்டுமல்ல இந்தியாவையும் அழித்துவிடும்.

காங்கிரஸ்கட்சி அசாம் மாநிலத்தில் ஏஐயுடிஎப் கட்சியுடனும், மேற்கு வங்கத்தில் ஐஎஸ்எப் கட்சியுடனும், கேரளாவில் ஐயுஎம்எல் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

ராகுல்காந்தியின் பேச்சுகள் நாட்டை துண்டாடும்விதத்தில் இருக்கின்றன. அசாம் மாநிலத்தில் அரசியல் செய்துகொண்டு வடக்கு, தெற்கு என்று ராகுல்பேசுகிறார். பழங்குடியினருக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இடையே வேறுபாடுகளை உருவாக்குகிறார்.

காங்கிரஸ்கட்சி அசாம் மாநிலத்தை 55 ஆண்டுகள் ஆட்சிசெய்தது. ஆனால், என்ன உங்களுக்குக் கொடுத்தது. முகலாய மன்னர்களால் கூட அசாமைத் தோற்கடிக்க முடியவில்லை. இங்கு லச்சித் போர்புஹான் எனும் ஹீரோ இருந்ததால் அது நடக்கவில்லை. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மூலம்தான் ஊடுருவல், வன்முறை, தீவிரவாதம், போராட்டம், பட்டினி, வேலையின்மை போன்றவை உருவாகின.

ராகுல்காந்தி,பிரியங்கா காந்தியின் தலைமையில் காங்கிரஸ்கட்சி வரலாற்றுப் பாடத்தில் மட்டும் இடம்பிடிக்கும். எதையும் சாதிக்க முடியாது”.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...