10 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்களுடன் ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்த எல்.முருகன்

தமிழக சட்டமன்றதேர்தல் ஏப்ரல் 6ம்தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் திருவிழா களைக் கட்டியுள்ளது. அரசியல்கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியபணிகளை எல்லாம் முடித்துகொண்டு, தற்போது தேர்தல்களத்தில் வேட்பாளர்களுக்கு தீவிர ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர். அதிமுகவுடனான பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிய உள்ளதையடுத்து நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல்செய்தனர். தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தாராபுரம் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிமனையில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக சார் ஆட்சியர் அலுவலகம்வரை சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல்நடத்தும் அதிகாரி பவன்குமாரிடம் எல்.முருகன் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது அவருடன் இதன்பிறகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.சி.மகேந்திரன் ஆகியோர் இருந்தனர்.

தன்னுடைய டெபாசிட் தொகையை செலுத்துவதற்காக தொண்டர்களிடம் இருந்து பெற்ற 5, 2 ரூபாய் நாணயங்கள், 10 ரூபாய் நோட்டுக்களை எல்.முருகன் வசூலித்து வைத்திருந்தார். அதனை தேர்தல்நடத்தும் அதிகாரிமுன்பு எண்ணி காண்பித்து, சரியாக 5 ஆயிரம் ரூபாய் இருப்பதை உறுதிசெய்த பிறகே செலுத்தினார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக பழனிமுருகன் கோயிலில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...