கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்

‘நாட்டின் கிழக்கு பகுதி யின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த பகுதியின் வளர்ச்சிக்கு, கோல்கட்டா தலைமை வகிக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலத்தின் முதல் முதல்வர் ஹரே கிருஷ்ண மஹதாப், எழுதிய, ‘ஓடிசா இதிஹாஸ்’ என்ற புத்தகத்தின் ஹிந்தி மொழியாக்க பதிப்பை, பிரதமர் மோடி, வெளியிட்டார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்த இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டில், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி எது என்றால், அது கிழக்கு பகுதி தான், மேற்கு வங்கம், அசாம் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான், இயற்கை மற்றும் மனித வளங்கள் அதிகமாக உள்ளன. கிழக்கு பகுதி தலைமை வகித்த போது தான், பாரதத்தின் பொற்காலமாக இருந்தது என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மை.

ஆனால், தற்போது வளர்ச்சியில் கிழக்கு பகுதி பின் தங்கியுள்ளது. மேற்கு பகுதிக்கு இணையாக, கிழக்கு பகுதியிலும் வளர்ச்சி ஏற்படுத்த, மத்திய அரசு அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு, துடிப்பான கோல்கட்டா தலைமை வகிக்கும். அதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஓடிசாவின் முதல் காங்கிரஸ் முதல்வராக பதவியேற்ற மஹதாப், அதே கட்சியை எதிர்த்து, 1975ல், ஜனநாயகத்தை காக்க போராடினார். இவ்வாறு அவர் பேசினார்.

One response to “கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...