கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்

‘நாட்டின் கிழக்கு பகுதி யின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த பகுதியின் வளர்ச்சிக்கு, கோல்கட்டா தலைமை வகிக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலத்தின் முதல் முதல்வர் ஹரே கிருஷ்ண மஹதாப், எழுதிய, ‘ஓடிசா இதிஹாஸ்’ என்ற புத்தகத்தின் ஹிந்தி மொழியாக்க பதிப்பை, பிரதமர் மோடி, வெளியிட்டார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்த இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டில், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி எது என்றால், அது கிழக்கு பகுதி தான், மேற்கு வங்கம், அசாம் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான், இயற்கை மற்றும் மனித வளங்கள் அதிகமாக உள்ளன. கிழக்கு பகுதி தலைமை வகித்த போது தான், பாரதத்தின் பொற்காலமாக இருந்தது என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மை.

ஆனால், தற்போது வளர்ச்சியில் கிழக்கு பகுதி பின் தங்கியுள்ளது. மேற்கு பகுதிக்கு இணையாக, கிழக்கு பகுதியிலும் வளர்ச்சி ஏற்படுத்த, மத்திய அரசு அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு, துடிப்பான கோல்கட்டா தலைமை வகிக்கும். அதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஓடிசாவின் முதல் காங்கிரஸ் முதல்வராக பதவியேற்ற மஹதாப், அதே கட்சியை எதிர்த்து, 1975ல், ஜனநாயகத்தை காக்க போராடினார். இவ்வாறு அவர் பேசினார்.

One response to “கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...