மம்தாவின் ஆட்டம் முடிய போகிறது

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தாவின் ஆட்டம் முடிய போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மேற்குவங்க மாநிலம் பர்தமான் பகுதியில் பாஜக சார்பில் திங்கள் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மேற்குவங்கத்தில் நடைபெற்ற நான்குகட்ட வாக்குப்பதிவில், மக்கள் பலபவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஆனால், இத்தேர்தலில் பாஜக ஏற்கெனவே தனது சதத்தை நிறைவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் ஆட்சியிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் அகற்றப்படும். நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தாபானர்ஜி தோல்வி அடைவார். அவரின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2-ஆம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்றார்.

நாடியா மாவட்டம், கல்யாணியில் நடைபெற்ற மற்றொருகூட்டத்தில் மோடி பேசியதாவது:
திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர், தலித்துகளை பிச்சைக்காரர்கள் எனக் கூறி கொச்சைப் படுத்துகின்றனர். மம்தாவின் ஆதரவு இல்லாமல், அவரது கட்சியினர் இத்தகைய கருத்துகளைக் கூறமுடியாது. ஆட்சேபகரமான இத்தகைய கருத்துகளைக் கூறிய தமதுகட்சியினரை முதல்வர் மம்தா கண்டிக்கவில்லை. அதற்காக அவர் வருத்தமும் தெரிவிக்க வில்லை. இதன் மூலம் மம்தா மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். தலித்துகளை அவமதித்ததன் மூலம் அவர் பெரும்பாவம் செய்துவிட்டார்.

மம்தாவின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உங்கள் (மம்தா) கோபத்தை வெளிப்படுத்த விரும்பினால், அதை என்மீது பிரயோகம் செய்யுங்கள். ஆனால் மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம்.

கூச்பிஹாரில் கடந்த 10-ஆம் தேதி நடந்த வன்முறையின் பின்னணியில் மம்தாபானர்ஜி உள்ளார். அங்கு மத்திய படைகளுக்கு எதிராக மக்களை அவர் தூண்டிவிட்டார். வன்முறையைத் தடுக்க சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழக்க நேரிட்டது.

மேற்கு வங்கத்திற்கு வந்த துணிச்சலான பிகார் போலீஸ் அதிகாரி அண்மையில் அடித்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கண்ட அதிர்ச்சியில், அவரது தாயாரும் இறந்து விட்டார். அந்த அதிகாரியின் தாய் உங்களுக்கு (மம்தா) தாய்மாதிரி இல்லையா? நீங்கள் (மம்தா) எவ்வளவு இரக்கமற்றவர் என்பது இங்குள்ள எந்த ஒருதாய்க்கும் தெரியாது.

வெற்றியும் தோல்வியும் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். ஆனால் மக்களின் வாக்களிக்கும் உரிமையைப்பறிக்க உங்களுக்கு (மம்தா) அதிகாரம் கிடையாது.மேற்குவங்க மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க இரட்டை என்ஜின் கொண்ட அரசு அதிகாரத்திற்கு வரவேண்டும். அதற்காக, தேர்தலில் அனைவரும் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...