மம்தாவின் ஆட்டம் முடிய போகிறது

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தாவின் ஆட்டம் முடிய போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மேற்குவங்க மாநிலம் பர்தமான் பகுதியில் பாஜக சார்பில் திங்கள் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மேற்குவங்கத்தில் நடைபெற்ற நான்குகட்ட வாக்குப்பதிவில், மக்கள் பலபவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஆனால், இத்தேர்தலில் பாஜக ஏற்கெனவே தனது சதத்தை நிறைவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் ஆட்சியிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் அகற்றப்படும். நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தாபானர்ஜி தோல்வி அடைவார். அவரின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2-ஆம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்றார்.

நாடியா மாவட்டம், கல்யாணியில் நடைபெற்ற மற்றொருகூட்டத்தில் மோடி பேசியதாவது:
திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர், தலித்துகளை பிச்சைக்காரர்கள் எனக் கூறி கொச்சைப் படுத்துகின்றனர். மம்தாவின் ஆதரவு இல்லாமல், அவரது கட்சியினர் இத்தகைய கருத்துகளைக் கூறமுடியாது. ஆட்சேபகரமான இத்தகைய கருத்துகளைக் கூறிய தமதுகட்சியினரை முதல்வர் மம்தா கண்டிக்கவில்லை. அதற்காக அவர் வருத்தமும் தெரிவிக்க வில்லை. இதன் மூலம் மம்தா மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். தலித்துகளை அவமதித்ததன் மூலம் அவர் பெரும்பாவம் செய்துவிட்டார்.

மம்தாவின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உங்கள் (மம்தா) கோபத்தை வெளிப்படுத்த விரும்பினால், அதை என்மீது பிரயோகம் செய்யுங்கள். ஆனால் மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம்.

கூச்பிஹாரில் கடந்த 10-ஆம் தேதி நடந்த வன்முறையின் பின்னணியில் மம்தாபானர்ஜி உள்ளார். அங்கு மத்திய படைகளுக்கு எதிராக மக்களை அவர் தூண்டிவிட்டார். வன்முறையைத் தடுக்க சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழக்க நேரிட்டது.

மேற்கு வங்கத்திற்கு வந்த துணிச்சலான பிகார் போலீஸ் அதிகாரி அண்மையில் அடித்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கண்ட அதிர்ச்சியில், அவரது தாயாரும் இறந்து விட்டார். அந்த அதிகாரியின் தாய் உங்களுக்கு (மம்தா) தாய்மாதிரி இல்லையா? நீங்கள் (மம்தா) எவ்வளவு இரக்கமற்றவர் என்பது இங்குள்ள எந்த ஒருதாய்க்கும் தெரியாது.

வெற்றியும் தோல்வியும் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். ஆனால் மக்களின் வாக்களிக்கும் உரிமையைப்பறிக்க உங்களுக்கு (மம்தா) அதிகாரம் கிடையாது.மேற்குவங்க மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க இரட்டை என்ஜின் கொண்ட அரசு அதிகாரத்திற்கு வரவேண்டும். அதற்காக, தேர்தலில் அனைவரும் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...