ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்கு பதிலாக பேனாவும் புத்தகமும் இருப்பதாக மோடி நெகிழ்ச்சி

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், நோட்டுப் புத்தகங்களும் இருப்பதாகக் கூறி பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார். பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மிரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. மக்கள் தைரியமாக வீடுகளை விட்டு வெளியே வந்து ஓட்டு போட்டுள்ளனர். இதுவரையில் நடைபெற்ற 7 தேர்தல்களுடன் ஒப்பிடும் போது, நேற்று நடந்த தேர்தலில் தான் அதிகபட்சமாக 60.21 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுயநல அரசியலால், காஷ்மீரில் உள்ள இந்துக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளனர். காஷ்மிரில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க தீவிரமாக உள்ளன. இந்த 3 கட்சிகளும் காஷ்மீருக்கு அழிவைத் தந்துள்ளன. இந்த கட்சிகள் இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக அநீதியை இழைத்துள்ளன. முன்பு லால் சவுக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றுவதற்கே அச்சுறுத்தல் இருந்து வந்தது. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது.ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்து இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே பா.ஜ.,வின் நோக்கமாகும், எனக் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முட ...

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் அமித் ஷா உறுதி வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் க ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்கு பதிலாக பேனாவும் புத்தகமும்  இருப்பதாக மோடி நெகிழ்ச்சி ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...