தெளிவான பதிலுடன் வருவது நல்லது. இல்லை என்றால் சிக்கலை சந்திப்பீர்கள்

இந்திய குறைதீர்வு அதிகாரியை நியமிக்க டுவிட்டர் நீண்டகாலம் எடுத்துக் கொள்வதை கடுமையாக கண்டித்துள்ள டில்லி உயர்நீதிமன்றம் , பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் புதியதகவல் தொழில்நுட்ப விதிப்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவைசேர்ந்த நபர்களை மட்டுமே குறைதீர்வு அதிகாரியாக நியமிக்கவேண்டும். முதலில் டுவிட்டர் நிறுவனம் இதற்கு இணங்க மறுத்தது. பின்னர் காலஅவகாசம் கேட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய ஐ.டி., விதிகளுக்கு இணங்காததால் டுவிட்டரின் சட்ட பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியது. இதனால் அதன்தளத்தில் வெளியாகும் சட்டவிரோத கருத்துக்கள், படங்கள், வீடியோக்களுக்கு நிறுவனமே பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் டுவிட்டரின் இடைக்கால குறைதீர்வு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தர்மேந்திரசதுர் பதவி விலகினார். அதன் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகளே இந்திய குறைவுதீர்வு அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியவிதிகளை பின்பற்றவில்லை என டுவிட்டருக்கு எதிராக வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் தொடர்ந்தவழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

டுவிட்டர் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் சஜன் பூவய்யா, இந்திய அதிகாரி ஒருவரை நியமிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், மேலும் 2 வாரங்கள் அதற்கு தேவைப்படும் என்று கூறினார்.

இப்பதிலை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி ரேகா பாலி, “உங்கள் பணிகள் முடிய எவ்வளவுநாள் ஆகும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நம் நாட்டில் எடுத்துக்கொள்ளலாம் என டுவிட்டர் கருதினால், நான் அதைஅனுமதிக்க மாட்டேன். டுவிட்டரிடமிருந்து முறையான காலக்கெடுதேவை. தெளிவான பதிலுடன் வருவது நல்லது. இல்லை என்றால் சிக்கலை சந்திப்பீர்கள்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...