திருக்கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு விண்ணப்பிப்போம்

திருக்கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு, தகுதியான நபர்களை விண்ணப் பிக்க வைக்க வேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறைவனுக்கு செலுத்திய உண்டியல் காணிக்கைபணத்தில் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு சொகுசு கார்களை வாங்கி குவிக்கிறார்கள். அறநிலைய துறையின் இது போன்ற பல்வேறு அவலங்கள் காரணமாக திருக்கோயில்கள் பல திறமையாகசெயல்பட முடியாமல் உள்ளன. இதற்காக பாஜக சார்பில் போராடி வருகிறோம். இப்போது அறநிலையத் துறையில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நீதி மன்றத்தில் மாநில அரசு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தின்படி, ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள அனைத்து திருக் கோயில்களிலும் அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப் பங்களை வரவேற்கிறது. நாம் எல்லோரும் திருக்கோயில்களில் நடைபெறும் அவலங்களை குறைசொல்வதோடு மட்டுமல்லாது, அவற்றையெல்லாம் சரிசெய்யும் அதிகாரத்தையும் பெறக் கூடிய மிக சாதகமான சூழ்நிலை தற்போது நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, பாஜக மாவட்டத்தலைவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள திருக் கோயில்களைக் கண்டறிந்து பட்டியலிடுங்கள். அந்த கோயில்களுக்கு அறங்காவலராக பணியாற்ற தகுதியுள்ள நபர்களை தேர்வுசெய்யுங்கள். அவரை முறைப்படி அரசுக்கு நவம்பர் 9-க்குள் விண்ணப்பிக்க வையுங்கள்.

தமிழகத் திருக் கோயில்களைப் பாதுகாக்கும் பெரும்பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.தகுதியான அறங்காவலர் நியமனத்தை கண் காணிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் தலையீடுகள் வந்தால் அதை நீதியும், சட்டமும் தடுக்கும். நாம் அனைவரும் நம்திருக் கோயில்களைப் பாதுகாக்க முன்வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...