திருக்கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு விண்ணப்பிப்போம்

திருக்கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு, தகுதியான நபர்களை விண்ணப் பிக்க வைக்க வேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறைவனுக்கு செலுத்திய உண்டியல் காணிக்கைபணத்தில் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு சொகுசு கார்களை வாங்கி குவிக்கிறார்கள். அறநிலைய துறையின் இது போன்ற பல்வேறு அவலங்கள் காரணமாக திருக்கோயில்கள் பல திறமையாகசெயல்பட முடியாமல் உள்ளன. இதற்காக பாஜக சார்பில் போராடி வருகிறோம். இப்போது அறநிலையத் துறையில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நீதி மன்றத்தில் மாநில அரசு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தின்படி, ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள அனைத்து திருக் கோயில்களிலும் அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப் பங்களை வரவேற்கிறது. நாம் எல்லோரும் திருக்கோயில்களில் நடைபெறும் அவலங்களை குறைசொல்வதோடு மட்டுமல்லாது, அவற்றையெல்லாம் சரிசெய்யும் அதிகாரத்தையும் பெறக் கூடிய மிக சாதகமான சூழ்நிலை தற்போது நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, பாஜக மாவட்டத்தலைவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள திருக் கோயில்களைக் கண்டறிந்து பட்டியலிடுங்கள். அந்த கோயில்களுக்கு அறங்காவலராக பணியாற்ற தகுதியுள்ள நபர்களை தேர்வுசெய்யுங்கள். அவரை முறைப்படி அரசுக்கு நவம்பர் 9-க்குள் விண்ணப்பிக்க வையுங்கள்.

தமிழகத் திருக் கோயில்களைப் பாதுகாக்கும் பெரும்பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.தகுதியான அறங்காவலர் நியமனத்தை கண் காணிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் தலையீடுகள் வந்தால் அதை நீதியும், சட்டமும் தடுக்கும். நாம் அனைவரும் நம்திருக் கோயில்களைப் பாதுகாக்க முன்வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...