பாதுகாப்பு கொள்கை இல்லாமல் எந்தநாடும் வளா்ச்சிகாண இயலாது

பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் முதல் முறையாக நாட்டின் பாதுகாப்புக்கென பிரத்யேககொள்கை வகுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளாா்.

எல்லை பாதுகாப்புப்படையில் (பிஎஸ்எப்) சிறப்பாக செயலாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கம் அளித்து கௌரவிக்கும் விழா புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் பிஎஸ்எப் படையின் முதல் தலைவரான கே.எப்.ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவாற்றினாா். அதில் அமித்ஷா பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனிக்கொள்கை உள்ளதா என்ற கேள்வி அடிக்கடி எழுவதுண்டு. பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு முன்பாக நாட்டுக்கென பிரத்யேக, சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை காணப்பட வில்லை.

முந்தைய ஆட்சிக்காலங்களில் இயற்றப்பட்ட பாதுகாப்பு கொள்கைகள் அனைத்தும் வெளியுறவு கொள்கையால் வழிநடத்தப் படுவதாகவே இருந்தன. முன்பு வெளியுறவுக் கொள்கையும் பாதுகாப்புக் கொள்கையும் இணைந்தே வகுக்கப்பட்டன. தனியாக பாதுகாப்புக்கொள்கை வடிவமைக்கப்பட வில்லை.

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில்தான் பாதுகாப்புக்கென பிரத்யேக, சுதந்திரமான கொள்கை வகுக்கப்பட்டது. அனைத்து நாடுகளுடனும் அமைதியான நல்லுறவை பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்தியாவின் எல்லைகளில் அத்துமீறுப வா்களுக்கும் நாட்டின் இறையாண்மையை சீண்டுபவா் களுக்கும் தக்கபதிலடி கொடுப்பதற்கு பாதுகாப்புக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.

பாதுகாப்பு தொடா்பான திட்டத்தை வகுத்ததில் இந்தப்பிரத்யேக கொள்கை பெரும் சாதனையாகும். இத்தகைய கொள்கையை வகுக்காமல், எந்தவொரு நாடும் வளா்ச்சிகாண முடியாது என நம்புகிறேன். உரிய பாதுகாப்புக்கொள்கை காணப்படவில்லை எனில் ஜனநாயகமும் தழைத்தோங்காது.

நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் எல்லைப்பாதுகாப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேலியமைக்கும் பணிகள்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவேலிகள் நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்து வருகின்றன.

சுமாா் 3 சதவீத எல்லைப் பகுதிகள் இன்னும் வேலியிடப்படாமல் உள்ளன. அது பயங்கரவாதிகள் அத்துமீறி உள்நுழைவதற்கும், போதைப்பொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கடத்துவதற்கும் வழிவகுத்துவருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்து எல்லைப்பகுதிகளும் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்படும்.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை சுமாா் 3,600 கி.மீ. தூரத்துக்கு எல்லைப்புற சாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 2020-ஆம் ஆண்டு வரை 4,764 கி.மீ. தூரத்துக்கு அத்தகைய சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் 14,450 மீட்டா் நீளத்துக்கு எல்லைப்புற பாலங்களும், 6 சுரங்க பாதைகளும் அமைக்கபட்டுள்ளன. சீன எல்லைப்பகுதிகளில் சுமாா் 683 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் அமைக்கப் படவுள்ளன.

நாட்டின் எல்லைப்பகுதிகளில் சாலைகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.23,000 கோடியிலிருந்து ரூ.44,000 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

சிறியரக ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) தாக்கி அழிப்பதற்கான தொழில் நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உள்ளிட்ட அமைப்புகள் வடிவமைத்து வருகின்றன. நாட்டின்பாதுகாப்பு சூழலை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு, ரோபோதொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் அமித்ஷா.

இந்தக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக, எல்லைப் பாதுகாப்புப்படையில் சிறப்பாகப் பணியாற்றிய வீரா்களுக்கான பதக்கங்களை அமைச்சா் அமித் ஷா வழங்கினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...