நீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட மோடி

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம்வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டார்.

வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுவிமான தளத்திற்கு சென்றடைந்த அவருக்கு, அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

அமெரிக்க அரசின்சார்பில் மூத்த அலுவலர்கள், அமெரிக்காவுக்கான இந்தியதூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் மோடியை வரவேற்றனர். இது குறித்து மோடி சுட்டுரை பக்கத்தில், “வாஷிங்டனில் உற்சாகமான வரவேற்புஅளித்த இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புலம்பெயர் இந்தியர்களே நமதுபலம். உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் மேம்பட்டிருப்பது பாராட்டத்தக்கது” என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி, தனது நீண்டவிமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திடுவது, முக்கியதிட்டங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்வது உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இது குறித்த புகைப்படமும் அவரது சுட்டுரையில் இணைக்கபட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில், மன்மோகன்சிங், பிரதமராக இருந்த போது வெளிநாட்டுப் பயணங்களின் போது செய்தியாளர்களை சந்திப்பார் என்றுகூறி மூன்று புகைப்படங்களையும் வெளியிட்டு, சில புகைப்படங்களை நகலெடுக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பெற்றதிலிருந்து ஏழாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ள மோடி, “அமெரிக்காவுடனான வியூகரீதியான கூட்டணி இப்பயணத்தின் மூலம் வலுப்படுத்தபடும் என தெரிவித்திருந்தார்.

வாஷிங்டனில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்திக்கவுள்ளார். ஆப்கன் விவகாரம் அதன் தாக்கங்கள், சீனாவின் ஆதிக்கம், தீவிரவாதம் மற்றும் எல்லைதாண்டிய பயங்கரவாதம், அமெரிக்க – இந்திய கூட்டணியை மேலும் விரிவுப்படுத்துவது எப்படி போன்ற வி்வகாரங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

ஜோபைடன் நடத்தும் கரோனா உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ்ஷ்ரிங்லா தெரி்வித்திருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...