இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

 இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு செழித்துத் தரையோடு தரையாகப் படரும் சிறிய கொடியினத்தை சார்ந்ததாகும் இது. தரைமட்டத்திற்கு மேல் ஓர் அடி வரை வளர்ந்து காணப்படும்.

இந்தச் செடியின் இலைகள் மட்டுமன்றி, வேர் மற்றும் வேர்ப்பட்டை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டதாகும். இந்தச் செடியின் ஒவ்வொரு பாகமும் கபத்தை அகற்றும் தன்மை கொண்டதாகும்.

அதிகப்படியான கபத்தாலும், ஈளை, இருமல் போன்றவையாலும், பித்த காசம் முற்றிய நிலையில் ஏற்படும் இரத்த வாந்தியாலும் துன்புருபவர்களுக்கு நல்ல மருந்தாகும்.

கிராமப்புறங்களில் இச்செடியின் வேரை இருமல் மட்டுமன்றி இரத்தம் கக்கும் நிலையிலுள்ளவர்களுக்கும் கொடுத்துக் குணமாக்கி விடுகிறார்கள்.

இன்புறா வேரின் மூலம் கபம் சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தி விடலாம். பித்தத்தின் அதிகரிப்பால் ஏற்படும் தொல்லைகளும் குணமாகும். காசநோய், ஈளை, மற்றும் பித்தசுரம், வயிற்றுப் பொருமலுடன் இரைச்சல் போன்றவை குணமாகும்.

இன்புறா இளைச்சாற்றைச் சுரத்தின் கொடுமையால் துன்புருவோரின் உள்ளங்கை, பாதங்கள் முதலிய அவயங்களில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

இந்தச் இலைச் சாற்றுடன் பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கலந்து உட்கொள்ள நெஞ்செரிச்சல் குணமாகும்.

இன்புறா இலைகளுடன் வல்லாரை இலைகளையும் சம அளவில் எடுத்துச் சுத்தம் செய்து ஒன்றாகச் சேர்த்து இட்டு இடித்து ஒரு மண்சட்டியிலிட்டு மூன்று டம்ளர் தண்ணீர் வைத்துக் கொதிக்க வைத்துப் பாதியளவாக வற்ற வைத்துத் தினமும் மூன்று வேளை பருகி வர ஆஷ்துமா, காசநோய், ஈளை, இருமல் இவை குணமாகும்.

இன்புறா வேர்ப்பட்டையை அம்மியில் வைத்துப் பசுவின் பால்விட்டு நன்கு அரைத்து வைத்துக்கொண்டு அதன்பினர் பசும்பாலில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு இதனுடன் போதிய அளவு கற்கண்டையும் சேர்த்துப் பின்னர் சிறிய கடாயில் விட்டுக் கொதிக்க வைக்கும் போது கிண்டிக் கொடுக்க வேண்டும்.

இவ்விதம் செய்தால் லேகியப் பதத்தை அடையும். இந்த லேகியத்தைத் தினமும் இரண்டு வேளை உட்கொண்டால் வாந்தி, இருமல், காசநோய் போன்றவை குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...