இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

 இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு செழித்துத் தரையோடு தரையாகப் படரும் சிறிய கொடியினத்தை சார்ந்ததாகும் இது. தரைமட்டத்திற்கு மேல் ஓர் அடி வரை வளர்ந்து காணப்படும்.

இந்தச் செடியின் இலைகள் மட்டுமன்றி, வேர் மற்றும் வேர்ப்பட்டை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டதாகும். இந்தச் செடியின் ஒவ்வொரு பாகமும் கபத்தை அகற்றும் தன்மை கொண்டதாகும்.

அதிகப்படியான கபத்தாலும், ஈளை, இருமல் போன்றவையாலும், பித்த காசம் முற்றிய நிலையில் ஏற்படும் இரத்த வாந்தியாலும் துன்புருபவர்களுக்கு நல்ல மருந்தாகும்.

கிராமப்புறங்களில் இச்செடியின் வேரை இருமல் மட்டுமன்றி இரத்தம் கக்கும் நிலையிலுள்ளவர்களுக்கும் கொடுத்துக் குணமாக்கி விடுகிறார்கள்.

இன்புறா வேரின் மூலம் கபம் சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தி விடலாம். பித்தத்தின் அதிகரிப்பால் ஏற்படும் தொல்லைகளும் குணமாகும். காசநோய், ஈளை, மற்றும் பித்தசுரம், வயிற்றுப் பொருமலுடன் இரைச்சல் போன்றவை குணமாகும்.

இன்புறா இளைச்சாற்றைச் சுரத்தின் கொடுமையால் துன்புருவோரின் உள்ளங்கை, பாதங்கள் முதலிய அவயங்களில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

இந்தச் இலைச் சாற்றுடன் பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கலந்து உட்கொள்ள நெஞ்செரிச்சல் குணமாகும்.

இன்புறா இலைகளுடன் வல்லாரை இலைகளையும் சம அளவில் எடுத்துச் சுத்தம் செய்து ஒன்றாகச் சேர்த்து இட்டு இடித்து ஒரு மண்சட்டியிலிட்டு மூன்று டம்ளர் தண்ணீர் வைத்துக் கொதிக்க வைத்துப் பாதியளவாக வற்ற வைத்துத் தினமும் மூன்று வேளை பருகி வர ஆஷ்துமா, காசநோய், ஈளை, இருமல் இவை குணமாகும்.

இன்புறா வேர்ப்பட்டையை அம்மியில் வைத்துப் பசுவின் பால்விட்டு நன்கு அரைத்து வைத்துக்கொண்டு அதன்பினர் பசும்பாலில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு இதனுடன் போதிய அளவு கற்கண்டையும் சேர்த்துப் பின்னர் சிறிய கடாயில் விட்டுக் கொதிக்க வைக்கும் போது கிண்டிக் கொடுக்க வேண்டும்.

இவ்விதம் செய்தால் லேகியப் பதத்தை அடையும். இந்த லேகியத்தைத் தினமும் இரண்டு வேளை உட்கொண்டால் வாந்தி, இருமல், காசநோய் போன்றவை குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.