இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

 இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு செழித்துத் தரையோடு தரையாகப் படரும் சிறிய கொடியினத்தை சார்ந்ததாகும் இது. தரைமட்டத்திற்கு மேல் ஓர் அடி வரை வளர்ந்து காணப்படும்.

இந்தச் செடியின் இலைகள் மட்டுமன்றி, வேர் மற்றும் வேர்ப்பட்டை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டதாகும். இந்தச் செடியின் ஒவ்வொரு பாகமும் கபத்தை அகற்றும் தன்மை கொண்டதாகும்.

அதிகப்படியான கபத்தாலும், ஈளை, இருமல் போன்றவையாலும், பித்த காசம் முற்றிய நிலையில் ஏற்படும் இரத்த வாந்தியாலும் துன்புருபவர்களுக்கு நல்ல மருந்தாகும்.

கிராமப்புறங்களில் இச்செடியின் வேரை இருமல் மட்டுமன்றி இரத்தம் கக்கும் நிலையிலுள்ளவர்களுக்கும் கொடுத்துக் குணமாக்கி விடுகிறார்கள்.

இன்புறா வேரின் மூலம் கபம் சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தி விடலாம். பித்தத்தின் அதிகரிப்பால் ஏற்படும் தொல்லைகளும் குணமாகும். காசநோய், ஈளை, மற்றும் பித்தசுரம், வயிற்றுப் பொருமலுடன் இரைச்சல் போன்றவை குணமாகும்.

இன்புறா இளைச்சாற்றைச் சுரத்தின் கொடுமையால் துன்புருவோரின் உள்ளங்கை, பாதங்கள் முதலிய அவயங்களில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

இந்தச் இலைச் சாற்றுடன் பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கலந்து உட்கொள்ள நெஞ்செரிச்சல் குணமாகும்.

இன்புறா இலைகளுடன் வல்லாரை இலைகளையும் சம அளவில் எடுத்துச் சுத்தம் செய்து ஒன்றாகச் சேர்த்து இட்டு இடித்து ஒரு மண்சட்டியிலிட்டு மூன்று டம்ளர் தண்ணீர் வைத்துக் கொதிக்க வைத்துப் பாதியளவாக வற்ற வைத்துத் தினமும் மூன்று வேளை பருகி வர ஆஷ்துமா, காசநோய், ஈளை, இருமல் இவை குணமாகும்.

இன்புறா வேர்ப்பட்டையை அம்மியில் வைத்துப் பசுவின் பால்விட்டு நன்கு அரைத்து வைத்துக்கொண்டு அதன்பினர் பசும்பாலில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு இதனுடன் போதிய அளவு கற்கண்டையும் சேர்த்துப் பின்னர் சிறிய கடாயில் விட்டுக் கொதிக்க வைக்கும் போது கிண்டிக் கொடுக்க வேண்டும்.

இவ்விதம் செய்தால் லேகியப் பதத்தை அடையும். இந்த லேகியத்தைத் தினமும் இரண்டு வேளை உட்கொண்டால் வாந்தி, இருமல், காசநோய் போன்றவை குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...