திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை..

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா வைத்திருந்தனர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறைக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று சனிக் கிழமையன்று தமிழ்நாடு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றுபேசினார்.

இப்போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: இந்துகோவிலில் ஒரு எண்ணெய் வாங்குவதற்குகூட இஓ கையெழுத்து போட்டால்தான் முடியும். என்னய்யா காலக்கொடுமை? சூடம், பத்தி வாங்குவதற்குகூட இஓ கையெழுத்து. திமுகவுக்கு வெள்ளைக்காரங்களே பரவாயில்லை. அவனாவது கோவிலைகொஞ்சம் ஒழுங்கா வெச்சிருந்தான். யாரையும் திருடவிடாமல் பார்த்துக்கொண்டான். இதை எல்லாம் கேள்வி கேட்போம் தொடர்ந்து பேசுவோம்.. இது ஆரம்பம்தான்.

மக்களாக முன்னால்வந்து இந்துசமய அறநிலையத் துறையே வேண்டாம் சாமீ என சொல்லவேண்டும். நாங்களே நிர்வாகம்செய்து கொள்கிறோம் என மக்களே சொல்லவேண்டும். ஆஸ்திரேலியாவில் இருந்து இப்பதான் 3 ஆண்டுகளுக்கு முன்னர் டோனி அபோட், பிரதமர் மோடியிடம் ஒரு அற்புதமான நடராஜர் சிலையை கொடுத்து விட்டு சென்றார். இது எங்கள் நாட்டில் இருக்கக்கூடாது உங்கள் நாட்டில் இருக்கவேண்டும் என்று சொன்னார் டோனி அபோட். இன்றைக்கு 200க்கும் மேல டிஸ்பியூட்டில் இருக்கிறது.

திமுக 6 முறை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருக்கிறது. திமுக ஆட்சியில் ஒரே ஒருசிலையை மீட்டுகொண்டு வந்ததற்கு, முயற்சி எடுத்ததற்கு டாக்குமெண்ட்டை திமுக ரிலீஸ்செய்யனும். பேச்சுக்கு மட்டும் இந்துக்கு பாதுகாவலனாக இருக்கிறேன். இந்துக்களுக்கு துணை இருக்கிறேன் என்கிறது திமுக. உங்களுக்குதேவை உண்டியல். கண்ணு உண்டியல்லதான் இருக்கு. கோவிலில் 6 காலபூஜை எப்படி நடக்கனும், அந்தமரபை எப்படி கடைபிடிக்கனும் என்கிற ஆசை இல்லை.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நமது உறவினர்கள் கடவுளுக்கு வேண்டிகொண்டு பசுமாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த கணக்குதணிக்கை அறிக்கையில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது எனில் 5,309 மாடுகளைக் காணவில்லை என்பதுதான். அதாவது பக்தர்கள் மாடுகொடுத்ததற்கு பதிவுகள் இருக்கின்றன. ஆனால் யார் ஏலம்விட்டது? யார் மாடுகளை சைடில் திருடி திமுக கிளைச் செயலாளருக்கு எல்லாம் கொடுத்தனர்? 5,309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் காணவில்லை. வடிவேலு கிணத்தை காணோம் என்று சொன்னது போல திருச்செந்தூரில் மாடுகள் காணாமல் போயிருக்கின்றன.மதுரை மீனாட்சி கோவிலில் உண்டியல் காசு எடுத்து 30லட்சத்தில் கார் வாங்கப்பட்டு உள்ளது. 2021 ஆண்டில் 21கோடி கோயில் நிர்வாகத்தை தணிக்கை செய்ய 70கோடி பணத்தை எடுத்து உள்ளனர். மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் மிச்சர், பட்டர் முருக்கு சாப்பிட்டுகின்றனர், அதுவும் உண்டியல் பணம் தான் , மேலும் வடபழனி முருகன் கோயிலில் அக்குவா வாட்டர் உள்ளிட்டவைகளை வாங்க உண்டியல் பணம் செலவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை என்பது இருக்காது அதற்கு முதல்கையெழுத்து பாஜக அமைச்சர் போடுவார் என அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...