திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை..

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா வைத்திருந்தனர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறைக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று சனிக் கிழமையன்று தமிழ்நாடு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றுபேசினார்.

இப்போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: இந்துகோவிலில் ஒரு எண்ணெய் வாங்குவதற்குகூட இஓ கையெழுத்து போட்டால்தான் முடியும். என்னய்யா காலக்கொடுமை? சூடம், பத்தி வாங்குவதற்குகூட இஓ கையெழுத்து. திமுகவுக்கு வெள்ளைக்காரங்களே பரவாயில்லை. அவனாவது கோவிலைகொஞ்சம் ஒழுங்கா வெச்சிருந்தான். யாரையும் திருடவிடாமல் பார்த்துக்கொண்டான். இதை எல்லாம் கேள்வி கேட்போம் தொடர்ந்து பேசுவோம்.. இது ஆரம்பம்தான்.

மக்களாக முன்னால்வந்து இந்துசமய அறநிலையத் துறையே வேண்டாம் சாமீ என சொல்லவேண்டும். நாங்களே நிர்வாகம்செய்து கொள்கிறோம் என மக்களே சொல்லவேண்டும். ஆஸ்திரேலியாவில் இருந்து இப்பதான் 3 ஆண்டுகளுக்கு முன்னர் டோனி அபோட், பிரதமர் மோடியிடம் ஒரு அற்புதமான நடராஜர் சிலையை கொடுத்து விட்டு சென்றார். இது எங்கள் நாட்டில் இருக்கக்கூடாது உங்கள் நாட்டில் இருக்கவேண்டும் என்று சொன்னார் டோனி அபோட். இன்றைக்கு 200க்கும் மேல டிஸ்பியூட்டில் இருக்கிறது.

திமுக 6 முறை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருக்கிறது. திமுக ஆட்சியில் ஒரே ஒருசிலையை மீட்டுகொண்டு வந்ததற்கு, முயற்சி எடுத்ததற்கு டாக்குமெண்ட்டை திமுக ரிலீஸ்செய்யனும். பேச்சுக்கு மட்டும் இந்துக்கு பாதுகாவலனாக இருக்கிறேன். இந்துக்களுக்கு துணை இருக்கிறேன் என்கிறது திமுக. உங்களுக்குதேவை உண்டியல். கண்ணு உண்டியல்லதான் இருக்கு. கோவிலில் 6 காலபூஜை எப்படி நடக்கனும், அந்தமரபை எப்படி கடைபிடிக்கனும் என்கிற ஆசை இல்லை.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நமது உறவினர்கள் கடவுளுக்கு வேண்டிகொண்டு பசுமாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த கணக்குதணிக்கை அறிக்கையில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது எனில் 5,309 மாடுகளைக் காணவில்லை என்பதுதான். அதாவது பக்தர்கள் மாடுகொடுத்ததற்கு பதிவுகள் இருக்கின்றன. ஆனால் யார் ஏலம்விட்டது? யார் மாடுகளை சைடில் திருடி திமுக கிளைச் செயலாளருக்கு எல்லாம் கொடுத்தனர்? 5,309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் காணவில்லை. வடிவேலு கிணத்தை காணோம் என்று சொன்னது போல திருச்செந்தூரில் மாடுகள் காணாமல் போயிருக்கின்றன.மதுரை மீனாட்சி கோவிலில் உண்டியல் காசு எடுத்து 30லட்சத்தில் கார் வாங்கப்பட்டு உள்ளது. 2021 ஆண்டில் 21கோடி கோயில் நிர்வாகத்தை தணிக்கை செய்ய 70கோடி பணத்தை எடுத்து உள்ளனர். மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் மிச்சர், பட்டர் முருக்கு சாப்பிட்டுகின்றனர், அதுவும் உண்டியல் பணம் தான் , மேலும் வடபழனி முருகன் கோயிலில் அக்குவா வாட்டர் உள்ளிட்டவைகளை வாங்க உண்டியல் பணம் செலவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை என்பது இருக்காது அதற்கு முதல்கையெழுத்து பாஜக அமைச்சர் போடுவார் என அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.