லடாக்குக்கு சரக்கு ஏற்றிச்சென்ற கோவை, சேலம் ஓட்டுநர்கள் பனிப் பொழிவால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி உணவுக்கு தவித்தனர். புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை முயற்சியால் அவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைத்துள்ளது.
தமிழகத்தின் கோவை, சேலம் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர்கள் ஜம்மு -காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதிக்கு சரக்குகளை ஏற்றிச்சென்றனர். அப்போது ஜம்முவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கடும் பனிப் பொழிவின் காரணமாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். அப்போது தாங்கள் கொண்டுசென்ற உணவு பொருள்கள் தீர்ந்துவிட்டதுடன், குளிர் அதிகமாக உள்ளது, தங்களுக்கு உதவிவேண்டும் என்று காணொளி வெளியிட்டனர்.
இதையறிந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ராணுவ மேஜர் துசார்பஜிரைத் தொடர்புகொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு உடனடியாக உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவர் ஜம்முகாஷ்மீர் மாநில ஆளுநர் சின்கா அலுவலகத்தில் உள்ள ராணுவ மேஜரைத் தொடர்பு கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக வழங்கவேண்டும் என்று கோரினார்.
அவர்கள் தந்த தகவலின்படி ஹரிபுரா என்ற பகுதியில் நின்று கொண்டிருக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு உதவிசெய்ய அந்தப் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் வீரர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. சிஆர்பிஎஃப் வீரர்களும் வாகன ஓட்டுநர்களைக் கண்டறிந்து அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து சென்று முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்குதேவையான உதவிகளைச் செய்துள்னனர். தற்போது அவர்கள் நலமுடன் உள்ளதாக ஆளுநர்மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |