உப்பு

 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான உப்பு சுவையற்றது. உடல் அழியாத வண்ணம் காக்கும் சக்தி உப்புக்கு உண்டு. உப்புச்சுவை அதிகமானால் உணர்ச்சிவசப்படுதல், அல்லது கை, கால், முகம் வீக்கம் உண்டாகும்.

தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். அல்லது இரத்த அழுத்தம் உண்டாகும். இரத்தத்தில் உள்ள உப்பைப் பிரிக்க சிறுநீரகங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உப்பு அளவுக்கு மீறினால் தப்பாக முடியும். நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் உப்பு போதுமானது.

உப்பை தனியாகப் பயன்படுத்தக்கூடாது. சூடுபடுத்தும் உணவுப் பொருள்களில் பயன்படுத்துவதுதான் சிறந்தது. சூடுபடுத்தாமல் பயன்படுத்தும் உணவுப் பொருள்களுக்கு தனியாக சூடுபடுத்திய உப்பைப் பயன்படுத்த வேண்டும். அல்லது மிளகுத்தூள் கலந்து பயன்படுத்த வேண்டும்.

உப்பின் தாய் கடல். தந்தை சூரியன். சூரிய வெப்பம் இல்லாவிட்டால் உப்பு இல்லை. உப்பை மீண்டும் சூடுபடுத்தினால் அந்த உப்பில் உள்ள தீமைகள் விலகி உப்பு தூய்மையாகும்.

சான்றாக கடலில் இருக்கும் தண்ணீர் உப்பு நிறைந்தது. ஆனால் சூரிய ஒளியால் ஆவியாகி அதன் பின்னர் மேகமாகி, அந்த மேகம் சூரிய ஒளியால் தூய்மையாகிறது. பின்னர் மழையாகப் பொழிகிறது. அந்த மழைநீர் சுத்தமானதாகவும், உப்பு நீங்கியதாகவும் இருக்கிறது.

நம் முன்னோர் உப்பைச் சுத்தப்படுத்திய பிறகே பயன்படுத்தினர். மண்சட்டியில் கல் உப்பை வறுக்க வேண்டும். அப்போது முருங்கைக்கீரை கலந்து வருதால் உப்பில் உள்ள தீமை விலகும். தற்போது நவீன உப்பு வந்துவிட்டது.

நம் முன்னோர் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கை இலைச்சாறு முறையாகப் பயன்படுத்தச் செய்தனர். முருங்கைக் கீரையில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-டி, வைட்டமின்-சி, வைட்டமின்-இ, வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் என்று சத்துகள் உள்ளன. இரசாயன உரம் சிறிதும் இல்லாதது முருங்கைக்கீரை.

இயற்கையாக மாறும் உடற்சூட்டை மீண்டும் பெருவது, உடலுழைப்பு உடையவர்க்கு அவர்கள் உழைப்பினால் எளிதாகிறது. உடலுழைப்பு, மூச்சுப்பயிற்சி, உடலுக்கேற்ற உணவுண்பது, உடல் சூட்டை இயற்கையாக காக்கும் சிறந்த முறையாகும்.

அருநெல்லிக்காய், வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, இளநீர், தனியா, வெங்காயம், வெங்காயத்தாள், முள்ளங்கி, முள்ளங்கிக்கீரை, முளைக்கீரை, கீரைத்தண்டு, வெண்பூசணிக்காய் போன்றவற்றில் இயற்கையாக உப்புச் சுவை உள்ளது.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...