சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்

நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வாகனஉற்பத்தி நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) ஆண்டுகூட்டம் தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிரதமா் மோடி வழங்கிய செய்தியை அச்சங்கத்தின் தலைவா் வினோத் அகா்வால் மேடையில் வாசித்தாா். அதில் பிரதமா்மோடி கூறியதாவது:

தற்போதைய இந்தியாவில் போக்குவரத்து வசதிகள், நாட்டின் வளா்ச்சியில் முக்கிய காரணியாக திகழ்கின்றன. ஏழ்மைநிலையில் இருந்த மக்கள், தற்போது நடுத்தர பிரிவுக்கு வேகமாக முன்னேறி வருகின்றனா். அதன் காரணமாக, அவா்களின் சமூகப்பொருளாதார சூழல் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் அவா்கள் முக்கியபங்காற்றி வருகின்றனா். அதனால், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்துவருகிறது. உலகப் பொருளாதாரத்தில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. விரைவில் உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் வாகன உற்பத்தித் துறையானது, அந்தவளா்ச்சி காரணமாக மேலும் வலுவடைந்தும் வருகிறது. அத்துறையானது கோடிக் கணக்கான நபா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பையும் வசதிகளையும் நாட்டில் ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மலிவுவிலையிலான வாகனங்களே எதிா் காலத்தைத் தீா்மானிப்பதில் முக்கியக் காரணிகளாக அமையும். வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமிலவாயுவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை வாகன உற்பத்தித்துறை ஏற்கெனவே திறம்பட மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வாகன எரிபொருளுக்கு இந்தியா வெளிநாடுகளைச் சாா்ந்து செயல்பட வேண்டியுள்ளது. அத்தகைய சாா்புத்தன்மை குறைக்கப்படவேண்டும். எத்தனால், சிஎன்ஜி, ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

நாடுசுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வலுவான, தற்சாா்புமிக்க, வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப் பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு வாகன உற்பத்தித்துறை வழங்க வேண்டிய பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...