ராகுல் , இந்துவும் இல்லை, இந்துத்துவாவாதியும் இல்லை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “இந்துத்துவாவாதிகள் அதிகாரத்தை மட்டும் விரும்புவார்கள். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து ஆட்சியில்இருக்கிறார்கள். இந்துத்துவ வாதிகளை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்றிவிட்டு உண்மையின் பாதையில் நடக்கும் இந்துக்களை ஆட்சியில் அமரவைக்க வேண்டும்.அதிகாரத்துக்காக எதையும் செய்வார்கள். அதிகாரத்தைத்தேடி அலையும் பாதையைப் பின்பற்றுகிறார்கள், உண்மையைத் தேடும் பாதையில் இல்லை. இந்ததேசம் இந்துக்களுக்கானது, இந்துத்துவா வாதிகளுக்கானது அல்ல” என்கிறார்.

”ராகுல் காந்தி தன்னை இந்து என்றும் இந்துத்துவாவாதி அல்ல என்றும் கூறுகிறார். ஆனால், இந்த தேசம் என்ன சொல்கிறதென்றால், ராகுல்காந்தி, இந்துவும் இல்லை, இந்துத்துவாவாதியும் இல்லை, இந்துஸ் தானியும் இல்லை என்கிறது. இதற்குக்காரணம் காந்தி குடும்பத்தினர் இந்துக்களையும், இந்துத்துவாவையும் தீவிரவாத அமைப்புகளான போக்கோஹராம், ஐஎஸ் ஆகியவற்றோடு ஒப்பிட்டு சதிசெய்து அவமானப் படுத்துகிறார்கள்.

அதிகார ஆசையுடன் யார் இருக்கிறார்கள் என்பது இந்ததேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும், சிறிய குழந்தைக்கும்கூட தெரியும். அது காந்தி குடும்பத்தினர்தான். உங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டநேரத்தில் கடந்த 1984-ம் ஆண்டு பெரிய கலவரத்தைத் தூண்டிவிட்டீர்கள். ஊழல்செய்தீர்கள், துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீர்கள். பாலகோட் துல்லியத் தாக்குதலில் மரங்கள் மட்டும்தான் விழுந்தன எனப் பேசினீர்கள்.

இந்துத்துவா என்றால் சீக்கியர்களையும், முஸ்லிம்களையும் கொல்வது என்று ராகுல் காந்தி முன்பு பேசினார். இந்து மதத்தைப் பற்றிய ராகுல் காந்தியின் குடும்பத்தின் மனநிலை இதிலிருந்து தெளிவாகிறது. அடுத்து வரும் தேர்தலை மனதில் வைத்துதான் இந்த வெறுப்புகள் வெளிவருகின்றன.

இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக இந்துக்கள் காங்கிரஸுக்குப் பாடம் புகட்டுவார்கள். அப்போது ராகுல் காந்திக்கு இந்து மதம் என்பது தியாகம் என நம்புவார். இருப்பினும், காந்தி குடும்பத்தினர் இதை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் ஒற்றுமையை ராகுல்காந்தி விரும்புவார் என நான் நினைக்கவில்லை. எப்போதும் தனதுபேச்சுகள் மூலம் விஷத்தைப் பாய்ச்சுகிறார் ராகுல் காந்தி. பிரதமர் மோடியின் தலைமையில் இந்ததேசம் வளர்வதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதுதான் முசாபர் நகர் வன்முறை நடந்தது. அப்போது உ.பி.யில் சமாஜ்வாதி ஆட்சியில் இருந்தது. இந்தவிஷம் தடவிய வார்த்தைகள் எல்லாம் எதிர் வரும் தேர்தலை மனதில் வைத்துப் பேசப்பட்டன. குறிப்பாக உத்தர பிரதேசத் தேர்தலை மனதில் வைத்துப் பேசப்பட்டவை. இந்துமதத்தைத் தவிர வேறு எந்தமதத்தைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்குத் துணிச்சல் இருக்கிறதா?

உ.பி. மண்ணில் இதுபோன்று ஆத்திர மூட்டும் பேச்சுகளைப் பேச ராகுல் காந்திக்குத் துணிச்சல் இருக்கிறதா? முதல்வர் யோகியின் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என ராகுல்காந்திக்குத் தெரியும். அதனால்தான் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் சென்று ராகுல் பேசினார்.

ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல்விலை உயர்வாக இருப்பது குறித்து ராகுல்காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஏன் பேசவில்லை. மின்சாரக் கட்டணம் உயர்வாக இருப்பது குறித்து ஏன் பேசவில்லை? ராகுல் காந்தி நாதுராம்கோட்சேவின் இரட்டைச் சகோதரர் போலத் தெரிகிறார்.

பாபுராம் சவுரேஸியா கோட்சேவின் தீவிரமான ஆதரவாளராக இருந்து, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர். ஏன் பாபுராம் பற்றி ஒருவார்த்தை கூட ராகுல் காந்தி பேசவில்லை, அவரை ஏன் கட்சியைவிட்டு நீக்கவில்லை. ராகுல் காந்தி கோட்சே பற்றிப் பேசுவார். ஏனென்றால் வெறுப்பைப் பரப்ப வேண்டுமே. பிரதமர் மோடி, பாஜக இரண்டுமே காந்தியின் வழிகளைப் பின்பற்றுகிறார்கள்”.

நன்றி கவுரவ் பாட்டியா
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...