2 மாநிலங்களில் தேசியக் கொடி ஏற்றிய கவர்னர் தமிழிசை

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்தஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இருமாநில பொறுப்புகளை ஒருசேர கவனித்து வரும் தமிழிசை இருமாநிலங்களிலும் குடியரசுதின விழாலும் தேசிய கொடியை ஏற்றுவார் என்ற தகவல் வலம்வந்தது.

மேலும், இரண்டு மாநிலங்களிலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, புதுச்சேரியில் முதல்மந்திரி ரங்கசாமி தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி நராயணசாமி தெரிவித்தார்.

இந்த நிலையில், தெலுங்கானாவில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்துவிட்டு விமானம் மூலம் புதுச்சேரிக்குவந்த தமிழிசை சவுந்தரராஜன் புதுவை கடற்கரைசாலை காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய வர்களுக்கு விருதுகளையும் வழங்குகினார். விழாவில் முதல்-மந்திரி ரங்கசாமி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...