நீட் சமூக நீதிக்கு எங்கே பாதிப்பு

நீட் தேர்வினால் சமூக நீதி பாதிக்கப்படுவதாக தி மு க உள்ளிட்ட கட்சிகள் பொங்கி எழுகின்றன. கடந்த ஆண்டு, தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம் பி பி எஸ் அனுமதியில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய இடங்களுக்கு, வகுப்பு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் கிடைத்த இடங்கள் குறித்த புள்ளி விவரம் இவர்களின் கோரிக்கை தவறானது என்பதை தெளிவாக்குகிறது.

எஸ்.டி வகுப்பினருக்கு (ST) ஒதுக்கப்பட்ட இடங்கள் 29 (1%) கிடைத்த இடங்கள் 29(1%),

எஸ்.சி அருந்ததியினருக்கு (SCA) ஒதுக்கப்பட்ட இடங்கள் 84 (3%), கிடைத்த இடங்கள் 85(3%),

எஸ்.சி (SC) சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 421(15%) கிடைத்த இடங்கள் 431(15.4%),

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (MBC) ஒதுக்கப்பட்ட இடங்கள் 560 (20%) கிடைத்த இடங்கள் 694 (24.8%),

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு (BCM) ஒதுக்கப்பட்ட இடங்கள் 84 (3%) கிடைத்த இடங்கள் 119 (4.2%),

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC) ஒதுக்கப்பட்ட இடங்கள் 757 (27%) கிடைத்த இடங்கள் 1340 (47.8%),

இதர வகுப்பினருக்கு (OC) ஒதுக்கப்பட்ட இடங்கள் 869 (31%) கிடைத்த இடங்கள் 107(3.8%).

இந்த புள்ளி விவரங்கள் மிக தெளிவாக உண்மை நிலையை எடுத்துரைக்கிறது. இதில் எந்த இடத்திலும் சமூக நீதிக்கு பங்கம் இல்லை என்பதோடு, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 31 % விழுக்காடு

ஒதுக்கப்பட்டுள்ள இதர வகுப்பினருக்கு(OC) 3.8 % இடங்களே கிடைத்துள்ளன . அதிகமாக பலனடைந்துள்ளது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்ட மாணவர்களே. இதில் எங்கிருந்து சமூக நீதி பாதிக்கப்படுகிறது என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

இந்த வருடமும் மதிப்பெண்கள் அடிப்படையில் பார்க்கும் போது, இதே நிலை தான் தொடரும் என தெரிகிறது. ஆகவே புலம்புவதை விட்டு கல்வி தரத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சி செய்வதே சிறப்பை தரும். உண்மைக்கு புறம்பான தகவல்களை, அறிக்கைகளை வெளியிட்டு மக்களை, மாணவர்களை குழப்புவதை நிறுத்தி கொண்டு கல்வி வியாபாரிகளுக்கு ஆதரவாக மலிவு அரசியல் செய்வதை கைவிட வேண்டும். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது நலன் தரும்.

நன்றி நாராயணன் திருப்பதி.

பாஜக மாநில செய்தி தொடர்பாளர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...