மறுதேர்தல் நடத்த வலியுறுத்தி வழக்குதொடர பா.ஜ., முடிவு

மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில், கள்ளஓட்டுக்கள் பதிவானதால், மறுதேர்தல் நடத்தக்கோரி, வழக்குதொடர தமிழக பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தல், மாநில தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றஞ் சாட்டியுள்ளார்.பா.ஜ., ஓட்டுவங்கி கணிசமாக உள்ள வடசென்னையில், வடமாநிலத்தினர் வசிக்கிற சில பகுதிகளில், அவர்களின் ஓட்டுக்கள் கொத்து, கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. கடந்த லோக்சபா, சட்ட சபை தேர்தலில் ஓட்டு அளித்த குடும்பத்தினர், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது ஆளுங்கட்சியினர் மீது சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.

விடுபட்ட வாக்காளர்களின் குமுறலை, வீடியோ வாயிலாக பா.ஜ.,வினர் பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி தேர்தலில், 30, 32, 43, 57, 58, 98 ஆகிய ஆறுவார்டுகளில், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் நடவடிக்கை மாவட்ட அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கேமரா பொருத்தாததால், வாக்காளர்களை தடுத்துநிறுத்தி விட்டு, ஆளுங்கட்சியினரே கள்ள ஓட்டு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்த புகாரை மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கூறுகையில், ”சுதந்திரமாக, நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும். வாக்காளர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.”ஆறு வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்,” என்றார்.

கோவை மாநகராட்சியின் சில வார்டுகளில், வாக்காளர்களை ஓட்டு போடவிடாமல், ஆளுங்கட்சியினரை மட்டும் அனுமதித்து, கள்ள ஓட்டுக்களை பதிவுய்த வீடியோ ஆதாரமும்; ஓட்டுச்சாவடி வாசலில் பணம் வழங்கிய வீடியோ ஆதாரமும் பா.ஜ.,வினரிடம் சிக்கியுள்ளது. ஆளுங்கட்சியினரின் தில்லுமுல்லுகளுக்கு, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் நிராகரித்தால், மறுதேர்தல் நடத்தும் கோரிக்கையுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...