மறுதேர்தல் நடத்த வலியுறுத்தி வழக்குதொடர பா.ஜ., முடிவு

மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில், கள்ளஓட்டுக்கள் பதிவானதால், மறுதேர்தல் நடத்தக்கோரி, வழக்குதொடர தமிழக பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தல், மாநில தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றஞ் சாட்டியுள்ளார்.பா.ஜ., ஓட்டுவங்கி கணிசமாக உள்ள வடசென்னையில், வடமாநிலத்தினர் வசிக்கிற சில பகுதிகளில், அவர்களின் ஓட்டுக்கள் கொத்து, கொத்தாக நீக்கப்பட்டுள்ளன. கடந்த லோக்சபா, சட்ட சபை தேர்தலில் ஓட்டு அளித்த குடும்பத்தினர், உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது ஆளுங்கட்சியினர் மீது சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.

விடுபட்ட வாக்காளர்களின் குமுறலை, வீடியோ வாயிலாக பா.ஜ.,வினர் பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி தேர்தலில், 30, 32, 43, 57, 58, 98 ஆகிய ஆறுவார்டுகளில், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் நடவடிக்கை மாவட்ட அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கேமரா பொருத்தாததால், வாக்காளர்களை தடுத்துநிறுத்தி விட்டு, ஆளுங்கட்சியினரே கள்ள ஓட்டு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்த புகாரை மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கூறுகையில், ”சுதந்திரமாக, நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும். வாக்காளர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.”ஆறு வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்,” என்றார்.

கோவை மாநகராட்சியின் சில வார்டுகளில், வாக்காளர்களை ஓட்டு போடவிடாமல், ஆளுங்கட்சியினரை மட்டும் அனுமதித்து, கள்ள ஓட்டுக்களை பதிவுய்த வீடியோ ஆதாரமும்; ஓட்டுச்சாவடி வாசலில் பணம் வழங்கிய வீடியோ ஆதாரமும் பா.ஜ.,வினரிடம் சிக்கியுள்ளது. ஆளுங்கட்சியினரின் தில்லுமுல்லுகளுக்கு, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் நிராகரித்தால், மறுதேர்தல் நடத்தும் கோரிக்கையுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...