தி.மு.க.,வினர், கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்

”அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை மறைக்க, முதல்வர் ஸ்டாலின், கவர்னரை பயன்படுத்துகிறார். தி.மு.க.,வினர், கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில் நடந்து வரும் புத்தகக் காட்சிக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று மதியம் வந்தார். அங்கு 400க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளைப் பார்வையிட்டு, சில புத்தகங்களை வாங்கினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். கடந்த முறை, தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை. எனவே, இம்முறை சிறப்புக் கவனம் செலுத்தி, கடிவாளம் அமைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அண்ணா பல்கலையில் மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை விவகாரத்தில் தமிழக பா.ஜ., மகளிர் அணியினர், பா.ம.க.,வினர், அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியபோது, காவல் துறை வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்தது.

ஆனால், உப்புச் சப்பில்லாத கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஷயத்தில், தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தனர்? அண்ணா பல்கலை பிரச்னையை திசை திருப்பவே இந்தப் போராட்டம் நடந்துள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடப்பில் உள்ளது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஆளும் கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என, அம்பேத்கர் சட்டம் இயற்றவில்லை. கவர்னரை ஆபாசமாக சித்தரித்து, தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதை காவல் துறை வேடிக்கை பார்க்கிறது.

எங்களாலும் முதல்வர் ஸ்டாலினை ஆபாசமாக சித்தரித்து போஸ்டர் ஒட்ட முடியும். ஆனால், அந்தப் பதவிக்கென ஒரு மரியாதை உள்ளதால் அமைதி காக்கிறோம்; தவிர்க்கிறோம்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கவில்லை என மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. இதை தமிழக முதல்வர் வாய் திறந்து சொல்ல மறுப்பது ஏன்? முதல்வரோ, துணை முதல்வரோ, கனிமொழியோ ஏன் மதுரை செல்லவில்லை.

தன் பிறந்தநாள் கொண்டாட்ட போஸ்டர்களால் கனிமொழிக்கு கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். அதை மறைக்க, கவர்னர் விவகாரத்தை பயன்படுத்திக் கொள்கிறார். அதற்காகவே, தான் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தாறுமாறாக கவர்னரை விமர்சித்து பேசியுள்ளார்.

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை மறைக்க, முதல்வர் ஸ்டாலின், கவர்னரை பயன்படுத்துகிறார். தி.மு.க.,வினர், கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...