புதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்

புதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டைவலிமையாக கட்டமைப்பதில் அக்கொள்கை முக்கியபங்கு வகிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விகொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு கடந்தஆண்டு உருவாக்கியது. பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, இந்தியாவை சர்வதேச அறிவுசார்வல்லரசாக மாற்றுவதே இக்கொள்கையின் நோக்கம் ஆகும்.புதிய தேசிய கல்விகொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந் துள்ளது. இதையொட்டி, நேற்று பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார். இதில், மத்திய கல்விமந்திரி தர்மேந்திர பிரதான், சில மாநிலங்களின் முதல்மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள், பள்ளிமுதல்வர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் புதிய தேசிய கல்விகொள்கையை களத்தில் அமல்படுத்த கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.இளம் தலைமுறையினருக்கு என்னமாதிரியான கல்வி அளிக்கிறோம் என்பதை பொறுத்துத் தான் எதிர்காலத்தில் எவ்வளவு உயரத்தை எட்டுவோம் என்பது இருக்கிறது. இந்தநாடு முற்றிலும் இளைஞர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் சாதகமாக இருக்கிறது என்பதற்கு புதிய கல்விகொள்கை உத்தரவாதம் அளிக்கிறது.நாட்டை வலிமையாக கட்டமைக்கும் மாபெரும் பணியில் புதிய கல்விகொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட செயற்கைநுண்ணறிவு திட்டம், இளைஞர்களை எதிர்கால சவால்களை சந்திக்க உகந்தவர்களாக மாற்றும். செயற்கை நுண்ணறிவால் இயக்கப் படும் பொருளாதாரத்துக்கு பாதையை திறந்துவிடும்.புதிய தேசியகல்வி கொள்கை, தாய் மொழிக்கும், மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. 8 மாநிலங்களில் உள்ள 14 என்ஜினீயரிங் கல்லூரிகள், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் என்ஜினீயரிங் கல்வியை கற்றுத்தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்பேசினார்.

One response to “புதிய தேசிய கல்விகொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...