மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை

மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல என்றும் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நடைபெற்றது.அதன்படி,நடைபெற்ற வாக்குப்பதிவின் போது காலை மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் அகற்றகூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதன் காரணமாக அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில்,பாஜக பிரமுகர் வெளியேற்றப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளதோடு,அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மேலூரில் பாஜக முகவர் செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப் போல வரவேண்டும் என்பதே விருப்பம்,இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் பாஜகவின் முன்னாள்மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லவிழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:”மேலூரில் பாஜக முகவர்செய்ததில் எந்த தவறும் இல்லை.ஏனெனில்,ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப்போல வரவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது.இதில் என்னதவறு இருக்கிறது?.

எந்த ஒருநபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நாளை வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்வார்களா?.பாஜக முகவர் தன்னுடைய கடமையைதான் செய்திருக்கிறார்”,என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...