மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை

மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல என்றும் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நடைபெற்றது.அதன்படி,நடைபெற்ற வாக்குப்பதிவின் போது காலை மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் அகற்றகூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதன் காரணமாக அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில்,பாஜக பிரமுகர் வெளியேற்றப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளதோடு,அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மேலூரில் பாஜக முகவர் செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப் போல வரவேண்டும் என்பதே விருப்பம்,இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் பாஜகவின் முன்னாள்மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லவிழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:”மேலூரில் பாஜக முகவர்செய்ததில் எந்த தவறும் இல்லை.ஏனெனில்,ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப்போல வரவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது.இதில் என்னதவறு இருக்கிறது?.

எந்த ஒருநபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நாளை வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்வார்களா?.பாஜக முகவர் தன்னுடைய கடமையைதான் செய்திருக்கிறார்”,என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...