வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல

கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றிவந்த 12,000 ஆசிரியர்களை, ஆட்சிக்கு வந்ததும் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, தேர்தல்வாக்குறுதி எண் 181ல் கூறி, ஏமாற்றி ஆட்சிக்குவந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆசிரியர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், பொய்யான நம்பிக்கை கொடுத்துவந்த திமுக, தற்போது அறவழியில் போராடிய ஆசிரியர்களை, சமூக விரோதிகளைக் கைது செய்வதைப் போல, அத்து மீறிக் கைது செய்திருக்கிறது. வாக்களித்தமக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல என்றாலும், நாட்டின் எதிர்காலமான மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை, இப்படி தரக்குறைவாக நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வீண் விளம்பரத்துக்காக, சிலைவைக்கிறோம், பூங்காக்கள் கட்டுகிறோம் என்று கடன் மேல் கடன் வாங்கி, மக்களைக் கடன் காரர்களாக்கியிருக்கும் திமுக, நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப்பெருமக்களை அவல நிலையில் தள்ளியிருக்கிறது. உடனடியாக, கைதுசெய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக் கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...