மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ., இப்போது கூண்டுக்கிளி அல்ல,” என, மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
மத்திய சட்டத் துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு கூறியுள்ளதாவது: அரசில்இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடும்போது விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்படும் சிரமம் என்னவென்பது எனக்கு தெரியும். கடந்த 2013ல் நிலக்கரி ஊழல் வெளிச் சத்துக்கு வந்தபோது, ‘சி.பி.ஐ., கூண்டுக்கிளி’ என உச்சநீதிமன்றமே விமர்சனம் செய்திருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படிஇல்லை. நரேந்திர மோடி நம் பிரதமராக பதவி வகிக்கிறார். சிபிஐ., இப்போது சுதந்திரமாக செயல் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘சி.பி.ஐ.,யின் நம்பகத்தன்மை பொது ஆய்வுக்கு உட்பட்டது. விசாரணை அமைப்புகள் அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும்’ என கூறியிருந்தார்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |