கோட்டையை நோக்கி பேரணிக்கு தயாராகும் பாஜக

ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல்விலையில் லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலையில் லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்கப் படும் என, திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய்மட்டும் குறைத்து விட்டு, சலுகை வழங்கியது போல பீற்றி கொண்டனர். டீசல்விலையில், ஒரு ரூபாய் கூட குறைக்காமல் மக்களை ஏமாற்றி விட்டனர்.இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதனால் மத்திய அரசின் கலா வரியை காட்டிலும், மாநில அரசின் மதிப்புகூட்டு வரி தான் அதிகம் என்றானது. ஆனாலும், மாநில அரசு வரியை குறைக்காதாம். மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிரும், அடிப்படையான கலால்வரியில், எந்த மாறுதலும் செய்யவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை முழுமையாக மறைத்து விட்டு, தாங்கள் மட்டுமே உத்தமர்கள் போல் காட்டி கொள்ளும் திமுக அரசு, போலி வேடம் போடுகிறது.

மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்ற தமிழகபாஜக தலைவர் கே.அண்ணாமலை, இதை பின்பற்றி, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையைகுறைக்கவேண்டும் என, வலியுறுத்தி இருந்தார். மேலும், 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், தலைமை செயலகத்தைநோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விதித்த, 72 மணி நேரகெடு, இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து, தமிழக பாஜக தலைமை போராட்டம் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறது.

கெடு முடிந்த பின்னும் தமிழக அரசு, பெட்ரோல், டீசல்விலையை குறைக்காத பட்சத்தில், அறிவித்தபடியே கோட்டையை நோக்கி, பாஜக, பேரணிநடக்கும்; முற்றுகை போராட்டமும் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை, தமிழக பாஜக தொடங்கி விட்டது. ஜூன் முதல் வாரத்தில், பிரம்மாண்டமாக கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...