கோட்டையை நோக்கி பேரணிக்கு தயாராகும் பாஜக

ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல்விலையில் லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலையில் லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்கப் படும் என, திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய்மட்டும் குறைத்து விட்டு, சலுகை வழங்கியது போல பீற்றி கொண்டனர். டீசல்விலையில், ஒரு ரூபாய் கூட குறைக்காமல் மக்களை ஏமாற்றி விட்டனர்.இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதனால் மத்திய அரசின் கலா வரியை காட்டிலும், மாநில அரசின் மதிப்புகூட்டு வரி தான் அதிகம் என்றானது. ஆனாலும், மாநில அரசு வரியை குறைக்காதாம். மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிரும், அடிப்படையான கலால்வரியில், எந்த மாறுதலும் செய்யவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை முழுமையாக மறைத்து விட்டு, தாங்கள் மட்டுமே உத்தமர்கள் போல் காட்டி கொள்ளும் திமுக அரசு, போலி வேடம் போடுகிறது.

மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்ற தமிழகபாஜக தலைவர் கே.அண்ணாமலை, இதை பின்பற்றி, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையைகுறைக்கவேண்டும் என, வலியுறுத்தி இருந்தார். மேலும், 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், தலைமை செயலகத்தைநோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விதித்த, 72 மணி நேரகெடு, இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து, தமிழக பாஜக தலைமை போராட்டம் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறது.

கெடு முடிந்த பின்னும் தமிழக அரசு, பெட்ரோல், டீசல்விலையை குறைக்காத பட்சத்தில், அறிவித்தபடியே கோட்டையை நோக்கி, பாஜக, பேரணிநடக்கும்; முற்றுகை போராட்டமும் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை, தமிழக பாஜக தொடங்கி விட்டது. ஜூன் முதல் வாரத்தில், பிரம்மாண்டமாக கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...