அதிகரித்து வரும் மின்தேவையால் நாட்டின் பொருளாதாரம் உயரும்

வெப்பநிலையால் அதிகரித்துவரும் மின் தேவையை பூர்த்திசெய்ய அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத்ஜோஷி கூறினார்.

என்.எல்.சி. இண்டியா லிமிடெட் நிறுவனத்தில் (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) சுரங்கப் பணிகளை ஆய்வு செய்தபின்னர் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிகரித்து வரும் மின்தேவையால் நாட்டின் பொருளாதாரம் உயரும். பிரதமரின் உஜாலா திட்டத்தின்கீழ் மக்களுக்கு இதுவரை 36.79 கோடி எல்.இ.டி மின்விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக மின்நுகர்வின் அளவு கணிசமாககுறைந்துள்ளது.

எனினும் அதிக வெப்பநிலையால் கடந்த சிலமாதங்களாக மின்நுகர்வு அதிகரித்துவருகிறது. இதை சமாளிக்க ஏதுவாக, தடையற்ற மின் உற்பத்தியை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துவருகிறது.

2040-ம் ஆண்டில் எதிர்பார்க்கபடும் மின்உற்பத்தி, சுமார் 3000 பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் அதேவேளையில், இந்தியாவின் எரிசக்திதேவை இரண்டு மடங்காக இருக்கும். இந்த தேவையைபூர்த்தி செய்ய, 2040-க்குள், அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை, சுமார் 1500 மெட்ரிக்டன்னாக அதிகரிக்கும்.

கடந்த 8 ஆண்டுகளில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின், மின் உற்பத்தித்திறன், 2740 மெகாவாட்டிலிருந்து 6061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கபட்டுள்ளது. மேலும், சுரங்கத்தின் திறன் ஆண்டிற்கு 30.60 மில்லியன் டன்னிலிருந்து 50.60 மில்லியன் டன்னாக உயர்த்தபட்டுள்ளது.

என்எல்சிஐஎல், அதன் உற்பத்தித்த்திறனில் 45 சதவீதத்திற்கும் மேலான, அனல் மின்சக்தி மற்றும் அதன் முழுமரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.