திரௌபதி முர்மு சரித்திரம் படைத்த பழங்குடியின பெண்

நடந்து முடிந்த இந்தியக் குடியரசுத் தலைவர்தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி(6,76,803) முர்மு வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை(3,80,177) விட 2,96,626 வாக்கு மதிப்புகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்தவெற்றியின் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவராக இந்தியவரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைய விருக்கும் நிலையில், இந்தியநாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. ஆளும் பா.ஜ.க கூட்டணிசார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க் கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் தேர்தல்களத்தில் எதிரெதிர் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

மொத்தமுள்ள 771 எம்பி-க்களில் காலியாக இருக்கும் ஐந்து பேரைத்தவிர மற்ற அனைவரும் வாக்களித்தனர். அதேபோல அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ-க்கள், காலியாகவிருக்கும் ஆறுபேர் நீங்கலாக 4,025 பேர் வாக்களித்தனர். குறிப்பாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர்,மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூலை 21) தொடங்கி நடைபெற்றது. வாக்குஎண்ணிக்கை முடிவில், பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு வெற்றி பெற்றிருக்கிறார். வரும் ஜூலை 25-ம் தேதி இந்தியாவின் புதியகுடியரசுத் தலைவராக பதவியேற்கவிருக்கிறார். இந்தநிலையில், குடியரசுத் தலைவராவதற்கு முன்பாக திரௌபதி முர்மு கடந்துவந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்ப்போம்!

திரௌபதி முர்மு, 1958-ம் ஆண்டு, ஜூன் 20-ம் தேதி ஒடிசாமாநிலம், மயூர்பஞ்ச் மாநிலத்திலுள்ள பாடிபோசி எனும் கிராமத்தில் பிறந்தார். சந்தால் பழங்குயினத்தைச் சேர்ந்தவர் தனது கல்லூரிப் படிப்பை புவனேஸ்வரிலுள்ள ரமாதேவி மகளிர் கல்லுாரியில் முடித்தார். அதன் பிறகு, பள்ளி ஆசிரியையாக நீண்டகாலம் பணியாற்றினார். ஷ்யாம் சரண் முர்மு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், இரண்டு மகன், ஒரு மகள் என மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால், திருமணமான சிலஆண்டுகளிலேயே விபத்து ஒன்றில் தன்னுடைய கணவரை இழந்தார். அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் தன்னுடைய இரண்டு மகன்களையும் பறிகொடுத்தார்.

ஆசிரியை பணியைகைவிட்ட திரௌபதி முர்மு பாஜக-வில் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டார். முதன்முதலாக 1997-ம் ஆண்டு நடந்த ராய்ரங்பூர் பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதன் பின்னர், 2000-ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், ராய்ரங்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அந்தத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். பா.ஜ.க – பிஜு ஜனதாதளம் கூட்டணி ஆட்சியில் 2000 முதல் 2002 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2002 முதல் 2004 வரை மீன் வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.

2004-ம் ஆண்டு ஒடிசா சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ராய் ரங்பூர் தொகுதியில் போட்டியிட்ட திரௌபதி முர்மு இரண்டாவது முறையாக எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். திரௌபதி முர்முவின் சிறப்பான செயல்பாடுகளுக்காக, 2007-ம் ஆண்டு சிறந்த ஒடிசா சட்டப் பேரவை உறுப்பினருக்கான நீலகந்தா விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு 2009 வரை எம்.எல்.ஏ-வாக இருந்தார். அதேசமயம், 2006 முதல் 2009 வரை பா.ஜ.க-வின் பழங்குடிப் பிரிவான `எஸ்.டி.மோர்ச்சா’வின் மாநிலத் தலைவராகவும் இருந்தார்.

2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக திரௌபதி முர்மு நியமிக்கப் பட்டார். இதன்மூலம் மாநிலத்தின் முதல்பெண் ஆளுநர் என்ற புகழை அடைந்தார். அதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டுவரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற 15-வது குடியரசுத்தலைவர் தேர்தலில், பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட திரௌபதி முர்மு, எதிர்பார்த்தபடியே அமோகவெற்றி பெற்றிருக்கிறார். இந்தவெற்றியின் மூலம் `இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர்’ என்ற புகழையும், `இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர்’ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...