இந்தியாவின் பால் உற்பத்தி கோதுமையின் வருவாயை மிஞ்சிவிட்டது

இந்தியாவின் பால்உற்பத்தி உலகிலேயே மிகஅதிகம் எனவும், இது அரிசி, கோதுமை வருவாயை மிஞ்சிவிட்டது எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில், தியோதர் என்ற இடத்தில்.

உள்ள பனாஸ் பால் பண்ணையில் புதியவளாகம் மற்றும் உருளை பதப்படுத்துதல் தொழிற் சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் பால்உற்பத்தியின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடியாக உள்ளது. இது அரிசிமற்றும் கோதுமையின் வருவாயைவிட அதிகம். இதனால் பால் துறையில் சிறுவிவசாயிகள் அதிக அளவில் பயனடைகின்றனர்.

இன்று, பால் அதிகளவில் உற்பத்திசெய்யும் நாடாக இந்தியா உள்ளது. இதில் கோடிக்கணக்கான சிறுவிவசாயிகளின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா பால் உற்பத்தி செய்தாலும், மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் உட்பட பலர் இதில்கவனம் செலுத்துவதில்லை. கோதுமை, அரிசி மூலம் கிடைக்கும் வருவாய் கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு நிகராக இல்லை. பால்துறையில் மிகப்பெரிய பலன் அடைபவர்கள் சிறு விவசாயிகள்.

இவர்களின் மேம்பாட்டுக்காகவும், கிராமபொருளதாரத்தை ஊக்குவிக்கவும் புதிய பால் வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார். இதோடு பனாஸ் சமுதாய வானொலி நிலையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், பாலாடை பொருட்கள் தயாரிப்பு, பால்பவுடர் தயாரிப்பு வசதிகளையும் பிரதமர் விரிவுபடுத்தினார். தமாபகுதியில் ஆர்கானிக் உரம் மற்றும் பயோ காஸ் ஆலையும் தொடங்கிவைக்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...