தேர்தலை மையப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தாதீர்கள்

தேர்தலை மனதில்வைத்து செயல்பட வேண்டாம் என்று பாஜக மேயர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

குஜராத்தில் உள்ள பாஜக மேயர்கள் மற்றும் துணை மேயர்களுக்கான மாநாட்டில் காணொளி வாயிலாக பங்கேற்று பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்தினார். அதன் விவரம்: “பொருளாதார செயல் பாடுகளுக்கான மையங்களாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாநகரங்கள் மாற்றம் பெற்றுவருகின்றன. எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாநகரங்களுக்கான திட்டமிடல்கள் தற்போதே தொடங்கப்படவேண்டும். நமது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இங்கு தான் தொடங்கப்படுகின்றன.

மாநகரங்களில் தொழில்வளர்ச்சி ஏற்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் தொழிற் பூங்காக்களை மேம்படுத்தப்பட வேண்டும். சிறியளவில் வணிகம் செய்பவர்களும் ஆன்லைன் முறையில் பணபரிவர்த்தனை மேற்கொள்வதை மேயர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்குத்தேவையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

நகர்ப்புற வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதிஒதுக்கீடு செய்துவருகிறது. 2014 வரை 250 கிலோ மீட்டர் அளவுக்கே மெட்ரோ ரயில்களுக்கான கட்டமைப்புகள் இருந்தன. அது தற்போது 775 கிலோ மீட்டராக உயர்த்தப் பட்டுள்ளது. புதிதாக ஆயிரம் கிலோ மீட்டர் பாதை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரங்கள் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாக முழுமையான வாழ்க்கைமுறையை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக மாநகரங்களில் வளர்ச்சிபணிகளை பாஜக சிறப்பாக மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. எனவே, பொறுப்பைஉணர்ந்து மேயர்கள் பணியாற்ற வேண்டும். பாஜகவுக்கு இருக்கும் நற்பெயரை தக்கவைத்துக் கொள்வதோடு, அதனை மேலும் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலை மனதில்வைத்து மக்கள் பிரதிநிதிகள் செயல்படக் கூடாது. தேர்தலை மையப்படுத்தி செயல்படும் போது மாநகரங்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது. தேர்தல்குறித்த அச்சம் காரணமாகவே பல நேரங்களில் சரியான முடிவை எடுக்க முடியாமல் போய்விடும். எனவே, தேர்தலை மையப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தாதீர்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...