ஜம்மு-காஷ்மீர் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை

ஸ்ரீநகரின் ஷேர்-இகாஷ்மீர் சர்வதேசமாநாட்டு மையத்தில் (SKICC) நேற்று நடைபெற்ற, இளைஞர்களுக்கு திறனூட்டுவது தொடர்பான நிகழ்ச்சிநடைபெற்றது. மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபின், நரேந்திரமோடி ஜம்மு-காஷ்மீரில் முதல்முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் மாநில அந்தஸ்து தொடர்பாக வாக்குறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடி, “சட்ட சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. உங்கள் வாக்குமூலம் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஜம்மு-காஷ்மீர் ஒருமாநிலமாக அதன் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்ளூர்ளவில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் மூலம் பிரச்சினைகளைத்தீர்க்க வழிகளைக் காண்கிறீர்கள். இதைவிடசிறந்தது என்ன? எனவே, இப்போது சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தங்களும் தொடங்கியுள்ளன. காலம் வெகுதொலைவில் இல்லை. உங்கள் வாக்குகள் மூலம் ஜம்முகாஷ்மீரின் புதிய அரசை தேர்வுசெய்வீர்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்படும் மாற்றங்களை உலகம் முழுவதும் கண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் கடந்த 2019ம் ஆண்டில் இரண்டுயூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் சிறப்பு அந்தஸ்தும் ரத்துசெய்யப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் வாக்குறுதியளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக சட்ட சபை தேர்தல் நடந்த நிலையில், அப்பகுதி மக்கள் புதிய தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர்.

இந்த சூழலில்தான் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்புவது என்பது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியின்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப் படும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இருப்பினும் அரசாங்கத்தால் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப் படவில்லை. இதனிடையே, உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஜம்மு & காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன் விளைவாகவே தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அங்கு மாநில அந்தஸ்தும் மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...