ஜம்மு-காஷ்மீர் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை

ஸ்ரீநகரின் ஷேர்-இகாஷ்மீர் சர்வதேசமாநாட்டு மையத்தில் (SKICC) நேற்று நடைபெற்ற, இளைஞர்களுக்கு திறனூட்டுவது தொடர்பான நிகழ்ச்சிநடைபெற்றது. மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபின், நரேந்திரமோடி ஜம்மு-காஷ்மீரில் முதல்முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் மாநில அந்தஸ்து தொடர்பாக வாக்குறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றி பிரதமர் மோடி, “சட்ட சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. உங்கள் வாக்குமூலம் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஜம்மு-காஷ்மீர் ஒருமாநிலமாக அதன் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்ளூர்ளவில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் மூலம் பிரச்சினைகளைத்தீர்க்க வழிகளைக் காண்கிறீர்கள். இதைவிடசிறந்தது என்ன? எனவே, இப்போது சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தங்களும் தொடங்கியுள்ளன. காலம் வெகுதொலைவில் இல்லை. உங்கள் வாக்குகள் மூலம் ஜம்முகாஷ்மீரின் புதிய அரசை தேர்வுசெய்வீர்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்படும் மாற்றங்களை உலகம் முழுவதும் கண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் கடந்த 2019ம் ஆண்டில் இரண்டுயூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் சிறப்பு அந்தஸ்தும் ரத்துசெய்யப்பட்டது. தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் வாக்குறுதியளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக சட்ட சபை தேர்தல் நடந்த நிலையில், அப்பகுதி மக்கள் புதிய தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர்.

இந்த சூழலில்தான் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்புவது என்பது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சியின்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப் படும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இருப்பினும் அரசாங்கத்தால் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப் படவில்லை. இதனிடையே, உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஜம்மு & காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன் விளைவாகவே தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அங்கு மாநில அந்தஸ்தும் மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...