தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இரண்டு நாள் பயணமாக ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில்ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கன்னவரம் சட்டமன்றத் தொகுதியின் கேசர்பள்ளிக்கு சென்றிருந்த திரு சவுகான், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் தெலங்கானாவின் மீனவலு, பெத்தகோபாவரம், மன்னூர், கட்லேரு ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை விமானம் மூலம் அமைச்சர் ஆய்வு செய்தார். கம்மம் தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் விவாதித்தார். உடனடி உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று திரு சவுகன் அவர்களிடம் கூறினார்.

“உங்கள் வலியைப் புரிந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி என்னை அனுப்பியுள்ளார், நீங்கள் உங்கள் பயிர்களை இழந்துவிட்டீர்கள், ஆனால் அவர் உங்கள் உயிரை இழக்க அவர் விட மாட்டார். நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன், எனது விவசாய சகோதரரின் வலியை என்னால் உணர முடிகிறது. நாங்கள் தகுந்த இழப்பீடு வழங்குவோம் என்று திரு சவுகான் தெரிவித்தார். நெருக்கடி காலங்களில் விவசாயிகளிடமிருந்து கடன்களை வசூலிக்க வேண்டாம் எனறு வங்கிகளை கேட்போம். அடுத்த பயிருக்கான உரங்கள் மற்றும் விதைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், விவசாயிகளின் வாழ்க்கையை இயல்பாக்க மாநில அரசுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அக்கறை கொண்டுள்ளதாக திரு சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய அரசின் பங்கையும் உள்ளடக்கிய மாநில பேரிடர் உதவி நிதிக்கு ரூ.3,448 கோடி உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...