உண்மை எண்ணங்களுடன் உழைக்கும்போது, ஆத்மார்த்தமான வளர்ச்சி ஏற்படும்

கர்நாடக மாநிலம் பெலகாவி-ல் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பிரதமரின் கிசான்திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகையாக ரூ.16,000 கோடியை அவர் விடுவித்தார். மறுசீரமைக்கப்பட்ட பெலாகாவி-ன் ரயில் நிலையக் கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப் பணித்தார். நீர்வள இயக்கத்தின் கீழ் 6 பல்வேறு கிராமத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பெலாகாவி-ன் மக்களின் ஈடு இணையற்ற அன்பு, ஆசீர்வாதங்கள் போன்றவை மக்கள் நலப்பணிகளை செய்வதற்கு அரசுக்குஉத்வேகம் அளிப்பதாகவும் இது வலிமையான ஆதாரம் என்றும் தெரிவித்தார். பெலாகாவிற்கு வருவது என்பது புனிதயாத்திரைக்கு குறைந்தது அல்ல, காலனியாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த சித்தூரின் ராணிசெல்லம்மா, புரட்சியாளர் க்ரந்திவீர் சங்கொலி ராயண்ணா ஆகியோரின் மண் இது என்பதை சுட்டிக்காட்டினார்.

போராட்டத்திற்கு இன்றளவும் பெயர்போன பெலகாவி இந்தியாவை எப்போதும் நினைவுகூரும் வகையில், பெலகாவின் பங்களிப்பு இருக்கும் என பிரதமர் எடுத்துரைத்தார்.

கர்நாடகாவின் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம்குறித்து குறிப்பிட்ட பிரதமர், பெலகாவி 100 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டார்ட்-அப் தாயகமாக திகழ்ந்தது என்றும் கூறினார். பாபுராவ் புசல்கர் ஏற்படுத்திய தொழிற் சாலை பல்வேறு தொழில்களுக்கு அடிப்படையாக இருந்தது என்றும் தெரிவித்தார். பெலகாவியின் இந்த பங்களிப்பை மேலும் வலுப்படுத்த இரட்டைஇயந்திர அரசு விரும்புவதாகவும் பிரதமர் கூறினார்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலம் பெலகாவிக்கு புதியசக்தியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார். போக்குவரத்து மற்றும் தண்ணீர் வசதிகளுக்காக நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பிலான திட்டங்கள் இப்பிராந்தியத்தில் அமைவதற்காக மக்களுக்கு அவர் வாழ்த்துதெரிவித்தார். பெலகாவி மூலம் பிரதமர் கிசான் திட்டத்திலிருந்து சிறப்பு நிதியை நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பெற்றுள்ளதாக கூறினார். ஒரு பொத்தானை அழுத்தியதன் மூலம் ரூ.16,000 கோடி நாட்டின் விவசாயிகளின் வங்கிகணக்குகளில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப் பட்டதாக தெரிவித்தார். இடைத்தரகர்கள் இன்றி பெருமளவிலானத் தொகைபரிமாற்றம் செய்யப் பட்டுள்ளதாகவும், இது உலகில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் கூறினார். காங்கிரஸ் ஆட்சிக்குறித்து ஒப்பிட்டு பேசியவர், ஒரு ரூபாய் பரிமாற்றம் செய்த போது, 15 பைசா மட்டுமே ஏழை மக்களை சென்றடைந்ததாக தெரிவித்தார்.

உண்மையான எண்ணங்களுடன் உழைக்கும்போது, ஆத்மார்த்தமான வளர்ச்சி ஏற்படும் என்றும் அதன் அடிப்படையில் இரட்டைஇயந்திர அரசு கர்நாடக மாநிலம் மற்றும் நாட்டுமக்களின் வளர்ச்சிக்காக அனைவருடனும் இணைந்து உண்மையாக உழைத்துவருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய வேளாண் துறையமைச்சர் நரேந்திர சிங் தோமர், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...