கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இ லையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி அமுங்கிவிடும் அல்லது பழுத்து உடையும்.

சிலவகைக் கட்டிகள் பழுத்து உடையாது. கட்டியாகக் கிளம்பி அப்படியே நின்றுவிடும். இப்படிப்பட்ட கட்டிகளை அமுங்கச் செய்யக் கருஞ்செம்பை இலையை சிற்றாமணக்கெண்ணெய்யில் வதக்கி, கட்டியின் மேல் வைத்துக் கட்டி வந்தால் மூன்றே நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து, காயத்தைச் சுத்தம் செய்து விட்டு, காயத்தின் மேல் கனமாக வைத்துக் கட்டிவிட வேண்டும். மறுநாள் கட்டை அவிழ்த்து மருந்தை எடுத்துப் பார்க்க வண்டும். மருந்து தனியே வந்து விட்டால், அதை எடுத்து விட்டுப் புன்னைச் சுத்தம் செய்து, மறுபடி இலையை அரைத்துக் கட்ட வேண்டும். எடுக்க வரவில்லை யானால் அப்படியே விட்டு விட வேண்டும். புண் ஆறிய பின் இலை தனியே வந்து விடும். அது வரை ஈரம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில பெண்மணிகளுக்கு மாதவிலக்கு ஒழுங்காக வெளியேறாது. இதனால் வயிற்று வழியும், சில தொந்தரவுகளும் உண்டாகும். இதை ஒழுங்கு படுத்தி மாதவிடாய் ஒழுங்காக வெளியேறக் கருஞ்செம்பை இலையை நைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, துணியில் வடிகட்டி, 8 தேக்கரண்டியளவு எடுத்து, காலை வேளையில் வெறும் வயிற்றில் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மாதா மாதாம் மாதவிடாய் ஒழுங்காக வெளியேறும். பத்தியமில்லை.

ஒரு பெரிய இரும்புக் கரண்டியை எடுத்து அதில் இரண்டு சங்களவு நல்லெண்ணையை விட்டு 12 கருஞ்செம்பைப் பூவை போட்டு, கழற்சிக் காயளவு கஸ்தூரி மஞ்சளையும், அதே அளவு சாம்பிராணியையும் சேர்த்துக் கரண்டியை எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்து, மருந்து சிவந்து வரும் சமயம் இறக்கி ஆறவைத்து, எண்ணையை மட்டும் இறுத்து தலையில் நன்றாகத் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் எப்போதும் போலத் தலை முழுகி வந்தால் நீடித்த தலைவலி, மண்டைக் குத்து இவைகள் பூரணமாகக் குணமாகும்.

சிரங்கு குணமாக கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்துக் காலையில் சிரங்கின் மேல் கனமாகத் தடவி மாலை வரை வைத்திருந்து, மாலையில் சுட்ட சிகைக்காய், மஞ்சள் வைத்து அரைத்த கலவையைப் போட்டுச் சுத்தம் செய்து, சாம்பல் ஒத்தடம் கொடுத்து தேங்காய் எண்ணெய் தடவி விட வேண்டும். இந்த விதமாக ஐந்து நாட்கள் செய்தால் போதும் சிரங்குகள் யாவும் மறைந்து விடும்.

இம்மரத்தின் பட்டையை சருகு போலக் காய வைத்து இடித்து சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை ஒரு டம்ளர் காய்ச்சிய பசுவின் பாலில் போட்டுக் கலக்கி, தேவையானால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கலக்கி கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 40 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

தேள், பூரான், குழவி, வண்டு, சிறுபாம்பு, தேனீ மற்றும் சிறு விஷப்பூச்சிகள் கடித்து அதன் விஷம் காரணமாக உடலில் வலி, கடுப்பு, தடிப்பு மற்றும் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும், காணாக் கடி சம்பந்தமான விஷம் காரணமாக ஏற்படும் கோளாறு நீங்கவும் கருஞ்செம்பை வேரையும் விதையையும் சம அளவாக எடுத்துக் காய வைத்து, உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து மாச்சல்லடையில் சலித்து வாயகன்ற ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை சுண்டைக்காயளவு வெண்ணையில் இரண்டு சிட்டிகையளவு இந்தத் தூளைப் போட்டுக் கலக்கிக் கொடுத்து வந்தால் எந்த வகையான விஷமானாலும் அது முறியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...