இந்தியா வளர்ந்ததேசமாக உருவெடுக்க தொழில் நுட்பம் உதவும்

வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்ததேசமாக உருவெடுக்க தொழில் நுட்பம் பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திறன் வெளிப்படுத்தல்; தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினாரில் கலந்துகொண்ட பிரதமர் இதுகுறித்து மேலும் கூறியது:

சிறு நிறுவனங்கள் தொழில் விதிமுறைகளை கடைபிடிக்கச் செய்யும் செலவினங்களை குறைக்க அரசுவிரும்புகிறது. எந்த விதமான செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு தருமாறு தொழில் நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம். இது வரை இது போன்ற 40,000 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்ததேசம் என்ற அந்தஸ்தை அடைவதற்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் உதவும். டிஜிட்டல் புரட்சி அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் உள் கட்டமைப்பை நவீனமான முறையிலும், பரந்தவகையிலும் உருவாக்கி வருகிறோம்.

வரி செலுத்துவோர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரடி தொடர்பில்லா வரி செலுத்தும் முறையை தொழில் நுட்பத்தின் உதவி கொண்டு உருவாக்கி செயல் படுத்தியுள்ளோம்.

5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில் நுட்பங்கள் மருத்துவம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் பெரியமாற்றங்களை ஏற்படுத்த தயாராக உள்ளன. சாமானியர்கள் எதிர்கொள்ளும் 10 சிக்கல்களை அடையாளம் கண்டு அதற்கு செயற்கை நுண்ணறிவு முறையில் தீர்வுகாண சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முற்சிக்க வேண்டும்.

தொழில்நுட்பம்தான் ‘‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’’ என்ற அடிப்படை திட்டத்தின் முயற்சியை உருவாக்கியது. ஜன்தன் யோஜனா, ஆதார், மொபைல் நம்பர் ஆகிய மூன்றும் சேர்ந்து ஏழைகளுக்கு நன்மைகளை வழங்க பலவழிகளில் உதவியுள்ளது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...