இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல்

சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ‘இன்டியா’ கூட்டணி கட்சியினர் அழிக்க நினைக்கிறார்கள்” என் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி வியாழக்கிழமை அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அம்மாநிலத்தின் சாகர்மாவட்டத்தில் நடந்த பேரணிக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “சமீபத்தில் அவர்கள் (எதிர்க்கட்சி கூட்டணி) மும்பையில் கூட்டம்நடத்தினர். அங்கு அவர்கள் காமாண்டியா கூட்டணியை எவ்வாறு வழி நடத்துவது மற்றும் அரசியல்வியூகம் குறித்து முடிவெடுத்திருப்பார்கள் என்று நான்நினைத்தேன். அவர்கள் மறைமுக கொள்கை ஒன்றினையும் எடுத்துள்ளனர். இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல்நடத்துவது என்பதே அது. இந்தியர்களின் நம்பிக்கைமீது தாக்குதல் நடத்தி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாட்டை ஒருங் கிணைத்து வந்த எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் மரபுகளை அழிக்கநினைக்கிறார்கள்.

‘காமாண்டியா’ கூட்டணியினர் சனாதனதர்மத்தை அழிக்க நினைக்கிறார்கள். இன்று அவர்கள் வெளிப் படையாக சனாதன தர்மத்தின் மீது குறிவைத்துள்ளார்கள். நாளை நம்மீதும் தாக்குதலைத் தொடங்குவார்கள். நாடுமுழுவதும் உள்ள சனாதானிகள் மற்றும் நாட்டை மிகவும் நேசிக்கும் அனைவரும் அவர்களிடம் மிகுந்த எச்சரிக் கையுடன் இருக்கவேண்டும். இது போன்றவர்களை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நிகழ்ச்சிஒன்றில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி, “டெங்கு , மலேரியா போல சனாதனத்தையும் அழிக்கப்பட வேண்டும்” என்று பேசினார். அவரது இந்தப்பேச்சை முன்வைத்து இன்டியா கூட்டணி மீது பாஜக கடும் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...