‘மத மரபுகளை கேலி செய்து சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்” என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நம்பிக்கை மற்றும் கலாசார நடைமுறைகளை கேலி செய்யும் அரசியல்வாதிகள், இந்தியாவின் மத பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அடிமை மனநிலை கொண்டவர்கள்.
இப்போதெல்லாம், மதத்தை கேலி செய்து மக்களைப் பிரிப்பதில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் குழு இருப்பதைக் காண்கிறோம், மேலும் பல நேரங்களில் வெளிநாட்டு சக்திகளும் அவர்களை ஆதரிப்பதன் மூலம் நாட்டையும் மதத்தையும் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.
மஹா கும்பமேளா2025 பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் ஏற்கனவே அங்கு வந்து, திரிவேணியில் புனித நீராடி, ஆசி பெற்றுள்ளனர். இந்த பிரமாண்டமான நிகழ்வால் அனைவரும் இயல்பாகவே வியப்படைகிறார்கள். இந்த மகா கும்பமேளா ஒற்றுமையின் அடையாளமாக எதிர்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
மேலும், கோவில்கள், மரபுகள் மற்றும் பண்டிகைகளை குறிவைப்பவர்களின் நோக்கம் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதாகும். இயல்பில் எப்போதும் முற்போக்கானதாக இருந்து வரும் ஒரு மதத்தையும் கலாசாரத்தையும் தாக்க அவர்கள் துணிகிறார்கள். நமது சமூகத்தைப் பிரித்து அதன் ஒற்றுமையை உடைப்பதே அவர்களின் நோக்கம்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |