சிறுபான்மை மீது அனுதாபம் இருந்தால் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவரை தலைவராக அறிவிக்க வேண்டும் – பிரதமர் மோடி

சிறுபான்மையினர் மீது அனுதாபம் இருந்தால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை கட்சியின் தலைவராக காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 14) தெரிவித்தார்.

தேர்தலிலும் முஸ்லிம் சமூகத்தினருக்கு காங்கிரஸ் 50% வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், அதில் வெற்றி பெற்றால் அவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையான முன்வைக்கட்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியில் மகாராஜா அக்ரசென் விமானநிலையத்தில் புதிய முனைய கட்டடத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 14) அடிக்கல் நாட்டினார். ஹிசார் – அயோத்தி இடையே பயணிகள் விமானத்தையும் தொடக்கி வைத்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே சிறுபான்மையினர் மீது அக்கறை இருந்தால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியின் தலைமை பொறுப்பை வழங்க முடியுமா? காங்கிரஸ் அதனைச் செய்ய மறுப்பது ஏன்? தேர்தலில் 50% இடத்தை முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க வேண்டும். அதில் அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் நினைப்பதை அதிகாரப்பூர்வமாக முன்வைக்கட்டும்.

வக்ஃப் வாரியத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. இது உரியவர்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்பட்டால், முஸ்லிம் இளைஞர்கள் இன்னும் பஞ்சர் ஒட்டி வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய தேவை ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...