கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்?கார்கேவுக்கு நட்டா கடிதம்

“ஆளும் தி.மு.க-இந்திய கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையேயான தொடர்பு இல்லாமலிருந்திருந்தால், பலியான உயிர்களை இன்று காப்பாற்றியிருக்கலாம்.” – நட்டா

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நான்கு நாள்களாக பெரும் விவாதப்பொருளாகவும், தி.மு.க ஆட்சி நிர்வாகத்தின்மீது கேள்வியெழுப்பக்கூடியதாகவும் இருக்கிறது. தற்போதுவரை பலிஎண்ணிக்கை 57-ஆக உயர்ந்திருக்கிறது. இதில், தி.மு.க அரசை விமர்சித்துவரும் எதிர்க்கட்சிகள், குற்றவாளிகளைக் கைதுசெய்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவருகிறது.

அந்த கடிதத்தில், “கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம் முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒருவேளை ஆளும் தி.மு.க-இந்தியகூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையேயான தொடர்பு இல்லாமலிருந்திருந்தால், பலியான உயிர்களை இன்று காப்பாற்றியிருக்கலாம். இது தொடர்பான ஊடக மற்றும் விசாரணை அறிக்கைகள், இந்த சட்டவிரோத மதுபானவணிகம் எவ்வாறு தண்டனையின்றி, திறந்த வெளியிலும், பகல் நேரத்திலும், வெளிப்படையாக அரசு மற்றும் காவல்துறையின் அனுசரணையுடன் எவ்வாறு செயல்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இவ்வளவு நடந்தபிறகும் உங்கள் (கார்கே) தலைமையிலான காங்கிரஸ் இதில் மௌனம் சாதிப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தில், பாஜக உட்பட ஒட்டுமொத்த நாடும், தி.மு.க-இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு அரசை சிபிஐ விசாரணைக்கு கொண்டு செல்ல அழுத்தம் தரவும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதை உறுதி செய்யவும் உங்களை வலியுறுத்துகிறது.

மேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க அல்லது குறைந்தபட்சம் இதில் அவர்களை குரல்கொடுக்கவாவது சொல்லுங்கள். அதோடு, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன், அரசின் இந்த பேரழிவுக்கு எதிராகக் கருப்பு பட்டை போராட்டத்தில் எங்கள் தலைவர்களுடன் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று நட்டா தெரிவித்திருக்கிறார்.

Also Read

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...