வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

 பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்ட போதிலும், வாந்தி எடுத்தபோதிலும் தொடர்ந்து சத்தான உணவுகளைக் கொடுக்க வேண்டும். பலரும் வாந்தி அதிகமாக இருக்கிறதே வயிற்றுப்போக்கு அதிகமாக உள்ளதே தொடர்ந்து உணவு கொடுத்தாலும் அது வாந்தியாக வெளியேறிவிடும் வயிற்றுப்போக்காகச் சென்றுவிடுமே எனக்கருதி உணவைக் கொடுப்பதில்லை. இது மிகவும் தவறான எண்ணமாகும்.

வயிற்றுப்போக்கின் போது உடலில் இருந்து அதிகளவு நீர்ச்சத்து வெளியேறிவிடுகிறது. அதேபோன்று உப்புச்சத்து இழப்பும் ஏற்படும். அந்த நேரத்தில் உடலில் செல்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காவிட்டால் உடல் மேலும் பலவீனமடையும். ஆகவே, வயிற்றுப்போக்கு ஏற்படுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்து அதைச் சிகிச்சை செய்கின்ற அதே வேளை நீர் இழப்பையும், உப்புச் சத்து இழப்பையும் சாரிசெய்து உடல் செல்களுக்குச் சக்தி அளிக்கத் தேவையான உணவு வகைகளை தொடர்ந்து கொடுத்துவர வேண்டும்.

பலரும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்ற போது குழந்தைகளுக்குத் தரும் பாலை நிறுத்திவிடுகிறார்கள். இது பெரிய தவறு. அவர்களுக்குத் தொடர்ந்து பால் கொடுத்துவர வேண்டும்.

நீர் இழப்பைச் சரிசெய்ய வீட்டிலேயே பல்வேறு பானங்களையும் தயார் செய்து கொடுக்கலாம்.

கஞ்சித் தண்ணீர், பருப்புத் தண்ணீர், தயிர், லஸ்சி, எலுமிச்சைச் சாறு, சூப்பு வகைகள், இளநீர், பல்வேறு பழரசங்கள் ஆகியவற்றை அடிக்கடி கொடுக்கலாம். சாதாரண காய்ச்சி சுத்தமாக வடிகட்டிய நீரில் மூன்று சிறிய கரண்டியில் சர்க்கரையும், ஒரு பங்கு உப்பும் கலந்து "சர்க்கரை உப்புக் கரைசல்" கொடுக்கலாம்.

பிறகு அரசாங்க மருத்துவமனைகளில் தரப்படும் ஒ.ஆர்.எஸ். எனப்படும் மருந்தினைத் தரலாம். இதில் சோடியம் குளோரைடு, பொட்டாஷியம் குளோரைடு, சோடியம் சிட்ரேட், மற்றும் குளுக்கோஸ் ஆகியவை அடங்கி இருக்கும்.

ஒரு பாக்கெட்டிலுள்ள பொடியை அப்படியே ஒரு லிட்டர் சுத்தமான நீரில் கலந்து சிறிது சிறிதாகக் கொடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் மாதம் 7 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 50மி.லி. முதல் 100மி.லி. வரை கொடுக்கலாம். 6 மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு 50மிலி வீதமும், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 200 மிலி வரையும் தரலாம்.

ஒவ்வொரு முறையும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகும் இதே அளவில் இந்தப் பொடியின் கரைசலைக் கொடுக்க வேண்டும். இப்படித் தயாரிக்கப்பட்ட பொடிக் கரைசலை அன்றே கொடுத்துத் தீர்க்க வேண்டும். இல்லையென்றால், அதை அப்புறப்படுத்திவிட வேண்டும். அதே கரைசலை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மேற்கூறிய முறைப்படி நீர் மற்றும் உப்புச்சத்து ஆகியவற்றைச் சரிசெய்யக் கொடுப்பதுடன் எளிதில் ஜீரணமாகக் கூடிய அதிகக் காரமில்லாத உணவுகளைத் தொடர்ந்து கொடுத்து வர வேண்டும்.

அதிகக் கொழுப்பான உணவு, மது வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். "மதுவகைகள்" பல்வேறு நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடலின் பகுதியை மேலும் பாதிக்கும், அத்துடன் பல்வேறு 'அமீபா' போன்ற கிருமிகளால் ஏற்படும் வயிற்றுக்கடுப்பைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படும் "மெட்டிரானிட ஷோல்" மற்றும் "டினிடஷோல்" ஆகியவற்றை எடுத்துக் கொண்டிருக்கும்போது மது அருந்தும் போது அதிக வாந்தி, வயிற்றில் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.
எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், வாழைப்பழம் ஆகியவற்றை இவர்களுக்குத் தொடர்ந்து கொடுக்கலாம்.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...