மோடி அரசின் புதிய உயிரிப் பொருளாதார கொள்கை

“மோடி அரசின் புதிய உயிரிப் பொருளாதாரக் கொள்கை வரும் ஆண்டுகளில் இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்ற உள்ளது” என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர் நலன் , பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்தியாவின் உற்பத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும்  லட்சிய பயோஇ3 (பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழலுக்கான உயிரி தொழில்நுட்பம்) கொள்கை பற்றி மத்திய அமைச்சரவையின் அண்மை முடிவு குறித்து ஊடகங்களுக்கு அவர் விளக்கமளித்தார்.

உலகளாவிய உயிரி தொழில்நுட்ப ஆற்றல் மையமாக இந்தியா உருவாகிவரும் நிலையில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்புகள், வேலைகள் மற்றும் சுற்றுச்சூழல் கடமைகளை மேம்படுத்த உறுதியளிக்கும் புதிய உயிரி தொழில்நுட்ப சாம்பியனாக பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் பாராட்டப்படுவார் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

பாரம்பரிய நுகர்வு நடைமுறைகளிலிருந்து உயர் செயல்திறன், மீளுருவாக்கம் செய்யும் உயிரி உற்பத்திக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்குக் கொள்கையை முன்னெடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார்.

உயிரிப் பொருளாதாரத்தின் எழுச்சி குறித்து பேசிய மத்திய அமைச்சர், “இந்தியாவின் உயிரிப்  பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2014-ல் 10 பில்லியன் டாலர் என்பதிலிருந்து   2024-ல் 130 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்ற வகையில் உயர்ந்துள்ளது. இது 2030-ம் ஆண்டில் 300 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இது,  வளர்ச்சி வேகத்தை மீண்டும் தூண்டும் என்பதுடன் நான்காவது தொழில் புரட்சியில் இந்தியாவை ஒரு சாத்தியமான தலைவராக நிலைநிறுத்தும்” என்றார்.

முக்கிய அம்சங்களை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி அடிப்படையிலான ரசாயனங்கள், ஸ்மார்ட் புரதங்கள், துல்லியமான உயிரி சிகிச்சைகள், பருவ நிலைக்கு உகந்த விவசாயம்,  கார்பன் பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்முனைவோரை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது என்றார்.

 

இது அதிநவீன உயிரி உற்பத்தி வசதிகள், உயிரி ஃபவுண்டரி தொகுப்புகள், உயிரி- செயற்கை நுண்ணறிவு   மையங்களை நிறுவும்  என்று அவர் கூறினார்.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப, நெறிமுறை சார்ந்த உயிரி பாதுகாப்பு கோட்பாடுகள், உலகளாவிய ஒழுங்குமுறை ஒத்திசைவு ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பில் முதலீடு செய்வதன் மூலம், பயோஇ3 கொள்கை இந்தியாவின் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ நோக்கத்திற்கு  உதவுகிறது என்பதையும் இது,  அறிவியல் கொள்கைகள் எவ்வாறு தேசிய வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும்   பயனுள்ள வகையில் இயக்க முடியும் என்பதற்கான அளவுகோலை அமைக்கிறது என்பதையும்  டாக்டர் ஜிதேந்திர சிங், மீண்டும் வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் � ...

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா – தமிழிசை கேள்வி வைகோ போன்றோர் ஈழப் பிரச்னை நடந்தபோது ஒரு மாதிரி ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் � ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ''ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை'' என்று மத்திய அமைச்சர் ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணை� ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு டில்லியில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...

மிகவும் துல்லியமான தாக்குதல் R ...

மிகவும் துல்லியமான தாக்குதல் – சசி தரூர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர� ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பயங்கரவாதிகளின்முகாம்களைநிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...