புத்தொழில் நிறுவனங்களுக்கு வலுவான தொழில் மேலாண்மை தொடர்பு தேவை -ஜிதேந்திர சிங்

“புத்தொழில் நிறுவனங்களின் நீடித்தத் தன்மைக்கு வலுவான தொழில் மேலாண்மைத் தொடர்பு தேவை” என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதில் இந்திய மேலாண்மை நிறுவனம் போன்றவை முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.

ஜம்முவின் புறநகரில் உள்ள ஜக்தியில் நிறுவப்பட்டுள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் (ஐஐஎம்) எம்பிஏ பிரிவின் புதிய மாணவர்களுக்கான அறிமுகத் திட்டத்தின் தொடக்க அமர்வில் அவர் உரையாற்றினார். வலுவான தொழில்துறை தொடர்புகள் காரணமாக பெரும்பாலான புத்தொழில் நிறுவனங்கள் வெற்றியைக் கண்டுள்ளதாக குறிப்பிட்டார். உதாரணமாக, வாசனைப் பொருள் உற்பத்தியில், வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் திறனை மேம்படுத்துவதை உறுதி செய்ததன் மூலமும், லாவெண்டர் மூலம் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள், பிற தயாரிப்புகள் போன்ற இமயமலைப் பகுதி தயாரிப்புகளின் விற்பனைக்காக சந்தை அணுகலை எளிதாக்கியதன் மூலமும் அரசு வெற்றியின் உதவியாளராக மாறியது என்று அவர் விளக்கினார்.

இமயமலை உயிரி வளங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கண்டறியப்படாத கனிமங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கவும், இந்தியப் பொருளாதாரத்திற்கு மதிப்பைக் கூட்டவும் முடியும் என்று அவர் தெரிவித்தார். “இந்தியாவின் கடலோர மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் போன்ற இமயமலை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஆர்வமுள்ள தலைமுறையினரைப் பற்றி பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இது சிறந்த காலம் என்று தெரிவித்தார். புதிய தொழில்கள் வளர்ந்து வருவதாகவும், அதன் விளைவாக புதிய வாய்ப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். “அனைத்துப் பகுதியிலிருந்தும் அனைவரும் வாய்ப்பைப் பெறும் வகையில் தொழில்நுட்பம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது” என்று அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...