புத்தொழில் நிறுவனங்களுக்கு வலுவான தொழில் மேலாண்மை தொடர்பு தேவை -ஜிதேந்திர சிங்

“புத்தொழில் நிறுவனங்களின் நீடித்தத் தன்மைக்கு வலுவான தொழில் மேலாண்மைத் தொடர்பு தேவை” என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதில் இந்திய மேலாண்மை நிறுவனம் போன்றவை முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.

ஜம்முவின் புறநகரில் உள்ள ஜக்தியில் நிறுவப்பட்டுள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் (ஐஐஎம்) எம்பிஏ பிரிவின் புதிய மாணவர்களுக்கான அறிமுகத் திட்டத்தின் தொடக்க அமர்வில் அவர் உரையாற்றினார். வலுவான தொழில்துறை தொடர்புகள் காரணமாக பெரும்பாலான புத்தொழில் நிறுவனங்கள் வெற்றியைக் கண்டுள்ளதாக குறிப்பிட்டார். உதாரணமாக, வாசனைப் பொருள் உற்பத்தியில், வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் திறனை மேம்படுத்துவதை உறுதி செய்ததன் மூலமும், லாவெண்டர் மூலம் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள், பிற தயாரிப்புகள் போன்ற இமயமலைப் பகுதி தயாரிப்புகளின் விற்பனைக்காக சந்தை அணுகலை எளிதாக்கியதன் மூலமும் அரசு வெற்றியின் உதவியாளராக மாறியது என்று அவர் விளக்கினார்.

இமயமலை உயிரி வளங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கண்டறியப்படாத கனிமங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கவும், இந்தியப் பொருளாதாரத்திற்கு மதிப்பைக் கூட்டவும் முடியும் என்று அவர் தெரிவித்தார். “இந்தியாவின் கடலோர மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் போன்ற இமயமலை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஆர்வமுள்ள தலைமுறையினரைப் பற்றி பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இது சிறந்த காலம் என்று தெரிவித்தார். புதிய தொழில்கள் வளர்ந்து வருவதாகவும், அதன் விளைவாக புதிய வாய்ப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். “அனைத்துப் பகுதியிலிருந்தும் அனைவரும் வாய்ப்பைப் பெறும் வகையில் தொழில்நுட்பம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது” என்று அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...