சமூக காடுகள் திட்டம்

நகர்ப்புறங்களில் பசுமை மண்டலங்களை மேம்படுத்தும் மாநிலங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க நகர்ப்புற வனத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்குகிறது. மாநகராட்சி, நகராட்சி மன்றங்கள்,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதற்காக 1000 நகர்ப்புற வன மண்டலங்களை உருவாக்கவும், அதன் மூலம் தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான நகரங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் நகர்ப்புற வனத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வனம், வனப்பகுதி இழப்பீட்டு நிதி மேலாண்மை  மற்றும் திட்டமிடுதல் ஆணைய நிதியால் ஆதரிக்கப்படுகிறது. நகர்ப்புற வனத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

நகர்ப்புற அமைப்பில் பசுமையான இடம் மற்றும் அழகியல் சூழலை உருவாக்குதல்.

தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழல் மேற்பார்வையை வளர்த்தல்.

பிராந்தியத்தின் முக்கியமான தாவரங்களின் இருப்பிட பாதுகாப்பை எளிதாக்குதல்.

மாசு தணிப்பு, தூய்மையான காற்று, இரைச்சல் குறைப்பு, நீர் அறுவடை மற்றும் வெப்ப தீவுகள் விளைவு மூலம் நகரங்களின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு பங்களிப்பு.

நகரத்தில் வசிப்பவர்களுக்கு சுகாதார நன்மைகளை நீட்டித்தல் மற்றும்

நகரங்களுக்கு காலநிலை நெகிழ்ச்சியாக உதவுதல்.

வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக, 1980, இந்திய வனச் சட்டம், 1927, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 மற்றும் பிற மத்திய, மாநில சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டங்கள் அந்தந்த மாநில அரசு, யூனியன் பிரதேச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...