NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2024 செப்டம்பர் 18 அன்று புதுதில்லியில் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க  விழாவில் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்வார்கள்.

என்பிஎஸ் வாத்சல்யாவுக்கு சந்தா செலுத்துதல், திட்ட சிற்றேட்டை வெளியிடுதல் மற்றும் புதிய இளம் சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்குஎண் அட்டைகளை விநியோகிப்பதற்கான ஆன்லைன் தளத்தையும் மத்திய நிதியமைச்சர் தொடங்கி வைப்பார்.

புதுதில்லியில் இத்திட்டம் தொடங்குவதன் ஒரு பகுதியாக, என்.பி.எஸ் வாத்சல்யா நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 75 இடங்களில் ஒரே நேரத்தில்ஏற்பாடு செய்யப்படும். மற்ற இடங்கள் காணொலிக் காட்சி மூலம் தொடக்க நிகழ்ச்சியில் இணையும். மேலும், அந்த இடத்தில் புதிய இளம் சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் உறுப்பினர்அட்டை விநியோகிக்கப்படும்.

என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதிய கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்க முடியும். குழந்தையின் பெயரில் பெற்றோர்கள் ஆண்டுதோறும் ரூ.1,000 முதலீடு செய்ய அனுமதிக்கிறது,இது அனைத்து பொருளாதார பின்னணியிலிருக்கும் குடும்பங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

இந்த புதிய முயற்சி குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் விரைவில் தொடங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஓய்வூதியஅமைப்பில் ஒரு முக்கியமான படிநிலையைக் குறிக்கிறது. இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நடத்தப்படும்.

என்பிஎஸ் வாத்சல்யாவின் தொடக்கம், அனைவருக்கும்நீண்டகால நிதித் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டைஎடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் எதிர்கால சந்ததியினரை நிதி ரீதியாக பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் மாற்றுவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...