NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2024 செப்டம்பர் 18 அன்று புதுதில்லியில் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க  விழாவில் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்வார்கள்.

என்பிஎஸ் வாத்சல்யாவுக்கு சந்தா செலுத்துதல், திட்ட சிற்றேட்டை வெளியிடுதல் மற்றும் புதிய இளம் சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்குஎண் அட்டைகளை விநியோகிப்பதற்கான ஆன்லைன் தளத்தையும் மத்திய நிதியமைச்சர் தொடங்கி வைப்பார்.

புதுதில்லியில் இத்திட்டம் தொடங்குவதன் ஒரு பகுதியாக, என்.பி.எஸ் வாத்சல்யா நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 75 இடங்களில் ஒரே நேரத்தில்ஏற்பாடு செய்யப்படும். மற்ற இடங்கள் காணொலிக் காட்சி மூலம் தொடக்க நிகழ்ச்சியில் இணையும். மேலும், அந்த இடத்தில் புதிய இளம் சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் உறுப்பினர்அட்டை விநியோகிக்கப்படும்.

என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதிய கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்க முடியும். குழந்தையின் பெயரில் பெற்றோர்கள் ஆண்டுதோறும் ரூ.1,000 முதலீடு செய்ய அனுமதிக்கிறது,இது அனைத்து பொருளாதார பின்னணியிலிருக்கும் குடும்பங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

இந்த புதிய முயற்சி குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் விரைவில் தொடங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஓய்வூதியஅமைப்பில் ஒரு முக்கியமான படிநிலையைக் குறிக்கிறது. இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நடத்தப்படும்.

என்பிஎஸ் வாத்சல்யாவின் தொடக்கம், அனைவருக்கும்நீண்டகால நிதித் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டைஎடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் எதிர்கால சந்ததியினரை நிதி ரீதியாக பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் மாற்றுவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...