பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் கல்யாண் பகுதியில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த தோட்டம் உடைய இந்த இல்லத்தில் பிரதமர் மோடி பசுக்களை வளர்க்கிறார். அதில் ஒரு பசு, கன்று ஈன்றது.
அந்த கன்றை வீட்டுக்குள் துாக்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தி, தன் மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் வீட்டிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் வந்துள்ளார். தாய் பசு, புதிய கன்று ஈன்றுள்ளது. அதன் நெற்றியில் ஒளியின் அடையாளம் உள்ளது. அதனால், அதற்கு தீபஜோதி என்று பெயர் வைத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |