தாமரை பிரதரஸ் பதிப்பக வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன்

தாமரை பிரதர்ஸ் பதிப்பக (Thamarai Brothers Publication) வெளியீட்டில் அண்ணாமலையின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீடு சென்னையில் நடந்தது.

வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி அன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில் தொடங்கிய, தமிழக பாஜகவின் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பொதுமக்களோடு பயணித்த ஒவ்வொரு அனுபவத்தையும், தினந்தோறும் பதிவு செய்யும் வாய்ப்பினை தினமலர் நாளிதழ் வழங்கியிருந்தது. தற்போது, நாளிதழில் வெளியான நமது பயண அனுபவங்களைத் தொகுத்து, ‘உங்களில் ஒருவன்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று காலை, தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் ( கோவை) திரு.ஆதிமூலம், தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் திரு.இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில்,தினமலர் நாளிதழ் வெளியீட்டாளர் (மதுரை) மரியாதைக்குரிய திரு. Dr. L.ராமசுப்பு அவர்களிடம், ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தைப் பெற்றுக் கொண்டதில் பெருமையடைகிறேன்.

பெரும் பாரம்பரியமிக்க, தேசியச் சிந்தனை மிக்க தினமலர் நாளிதழ், குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்ததோடு, பொதுமக்கள் நலனுக்காக எப்போதுமே குரல் கொடுத்து வரும் பெருமைக்குரியது. அரசுகள் தவறிழைக்கும் போது, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்து, ஜனநாயகத்தின், வலிமையான நான்காவது தூண் என்ற பத்திரிகை தர்மத்தினையும் கடைப்பிடித்து வரும் சிறப்புக்குரியது.

கடந்த 73 ஆண்டுகளாக, சீரிய முறையில் செயலாற்றி வரும் தினமலர் நாளிதழில், என் மண் என் மக்கள் பயண அனுபவங்களை, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கியதற்கும், அவற்றை, ‘உங்களில் ஒருவன்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருப்பதற்கும், நாளிதழ் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...