வளர்ந்த மற்றும் முன்னேற்றம் கொண்ட லடாக்கை உருவாக்குவதற்கான மோடியின் தொலைநோக்குப்பார்வையைத் தொடர்ந்து 5 புதிய மாவட்டங்கள் உருவாக்க முடிவு

வளர்ந்த மற்றும் முன்னேற்றம் கொண்ட லடாக்கை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பற்றி ‘சமூக ஊடக எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்த முடிவின் மூலம், புதிய மாவட்டங்களான ஜான்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகியவை நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை தங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார். இந்த ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது லடாக்கில் லே மற்றும் கார்கில் உட்பட மொத்தம் ஏழு மாவட்டங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

லடாக் பரப்பளவின் அடிப்படையில் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகும். தற்போது, லடாக்கில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இது இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். மிகவும் கடினமானதாகவும், அணுக முடியாததாகவும் இருப்பதால், தற்போது மாவட்ட நிர்வாகம் அடிமட்ட அளவில் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறது.

இந்தப் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் அனைத்து பொது நலத் திட்டங்களும் மக்களை எளிதாக அடைய முடியும், மேலும் அதிகமான மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உள்துறை அமைச்சகத்தின் இந்த முக்கியமான முடிவு லடாக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு “கொள்கை அளவிலான ஒப்புதல்” வழங்குவதோடு,  புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான தலைமையகம், எல்லைகள், கட்டமைப்பு, பதவிகளை உருவாக்குதல், மாவட்ட உருவாக்கம் தொடர்பான வேறு எந்த அம்சத்தையும் மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு லடாக் நிர்வாகத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகு, லடாக் யூனியன் பிரதேசம் இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான இறுதி முன்மொழிவை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும்.

லடாக் மக்களுக்கு மகத்தான வாய்ப்புகளை உருவாக்க மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...