வளர்ந்த மற்றும் முன்னேற்றம் கொண்ட லடாக்கை உருவாக்குவதற்கான மோடியின் தொலைநோக்குப்பார்வையைத் தொடர்ந்து 5 புதிய மாவட்டங்கள் உருவாக்க முடிவு

வளர்ந்த மற்றும் முன்னேற்றம் கொண்ட லடாக்கை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பற்றி ‘சமூக ஊடக எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்த முடிவின் மூலம், புதிய மாவட்டங்களான ஜான்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகியவை நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை தங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார். இந்த ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது லடாக்கில் லே மற்றும் கார்கில் உட்பட மொத்தம் ஏழு மாவட்டங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

லடாக் பரப்பளவின் அடிப்படையில் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகும். தற்போது, லடாக்கில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இது இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். மிகவும் கடினமானதாகவும், அணுக முடியாததாகவும் இருப்பதால், தற்போது மாவட்ட நிர்வாகம் அடிமட்ட அளவில் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறது.

இந்தப் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் அனைத்து பொது நலத் திட்டங்களும் மக்களை எளிதாக அடைய முடியும், மேலும் அதிகமான மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உள்துறை அமைச்சகத்தின் இந்த முக்கியமான முடிவு லடாக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு “கொள்கை அளவிலான ஒப்புதல்” வழங்குவதோடு,  புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான தலைமையகம், எல்லைகள், கட்டமைப்பு, பதவிகளை உருவாக்குதல், மாவட்ட உருவாக்கம் தொடர்பான வேறு எந்த அம்சத்தையும் மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு லடாக் நிர்வாகத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகு, லடாக் யூனியன் பிரதேசம் இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான இறுதி முன்மொழிவை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும்.

லடாக் மக்களுக்கு மகத்தான வாய்ப்புகளை உருவாக்க மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...