மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி

‘புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என பிரதமர் மோடி பேசினார்.

பஞ்சாப், சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் குடிமக்களின் லட்சியங்களை புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்ற வழி வகுக்கும். முந்தைய சட்டங்களின் நோக்கம் இந்தியர்களை தண்டிப்பதும், அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும் ஆகும்.

துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும், நடைமுறையில் இருந்துள்ளது. குடிமக்களை அடிமைகளாக நினைத்துப் பயன்படுத்தினர். நாம் ஏன் அந்த சட்டங்களைத் பின்பற்ற வேண்டும்.முந்தை ஆட்சியில் இருந்தவர்கள் சட்டத்தை மாற்ற நினைக்கவில்லை. காலனித்துவ மனப்பான்மையில் இருந்து வெளி வர வேண்டும் என நினைத்து, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து தீர்மானம் போட்டேன்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில், நமது நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து சட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டு உள்ளன. இதனை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...