மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி

‘புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என பிரதமர் மோடி பேசினார்.

பஞ்சாப், சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் குடிமக்களின் லட்சியங்களை புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்ற வழி வகுக்கும். முந்தைய சட்டங்களின் நோக்கம் இந்தியர்களை தண்டிப்பதும், அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும் ஆகும்.

துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும், நடைமுறையில் இருந்துள்ளது. குடிமக்களை அடிமைகளாக நினைத்துப் பயன்படுத்தினர். நாம் ஏன் அந்த சட்டங்களைத் பின்பற்ற வேண்டும்.முந்தை ஆட்சியில் இருந்தவர்கள் சட்டத்தை மாற்ற நினைக்கவில்லை. காலனித்துவ மனப்பான்மையில் இருந்து வெளி வர வேண்டும் என நினைத்து, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து தீர்மானம் போட்டேன்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில், நமது நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து சட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டு உள்ளன. இதனை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...