எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு

நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் இன்றே உறுதி ஏற்க வேண்டும் என்று குடியரசுத்துணைத் தலைவர்ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார். நாம் ஒருவரை எழுத்தறிவுள்ளவராக மாற்றும்போது, அவரைஅறியாமையில் இருந்து விடுவித்து அவரை கண்ணியமாக உணர வைக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (08.09.2024) நடைபெற்ற சர்வதேசஎழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, சிறுமியோஎன யாராக இருந்தாலும் ஒருவருக்கு கல்வி அளிப்பதன் மூலம் நாம் பெறும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது என்றார்.

கல்வி என்பது எந்த வகையிலும் ஒருவரிடம் இருந்து பறிக்கமுடியாத ஒன்று என அவர் தெரிவித்தார். அதை பகிர்ந்து கொண்டேஇருக்கும் வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். எழுத்தறிவை ஆர்வத்துடன்அதிகரித்தால், நாளந்தா, தக்ஷசீலா போன்ற கற்றல் மையமாக இந்தியா தனது பழைய நிலையைமீண்டும் அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய தேசியக் கல்விக்கொள்கையை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தஅவர், இந்த கொள்கை தேசத்திற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்றார்.

இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை நமது இளைஞர்கள்தங்கள் திறமையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கிறது எனவும்அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாய்மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜக்தீப் தன்கர், இந்தியாவின் இணையற்ற மொழிவாரி பன்முகத்தன்மை குறித்து விரிவாகப் பேசினார்.  மொழியின்செழுமையைப் பொறுத்தவரை, பல மொழிகளைக்கொண்ட ஒரு தனித்துவமான தேசம் இந்தியா என்று அவர் குறிப்பிட்டார்.

ஆறு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு நபரையாவது கல்வியறிவு பெறச்செய்ய அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கடந்தபத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை எடுத்துரைத்து அதற்கு குடியரசுத் துணைத்தலைவர்ஜக்தீப் தன்கர் பாராட்டுத் தெரிவித்தார்.

முன்னதாக தொடக்க உரையாற்றிய மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, சுகாதார நிலைமையை மேம்படுத்துதல், பெண்களுக்குஅதிகாரமளித்தல், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவற்றில் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். எழுத்தறிவு என்பது வளர்ச்சிக்கான இலக்கு மட்டுமல்ல எனவும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமே இதுதான் என்றும் அவர் கூறினார். புதிய தேசிய கல்விக் கொள்கை-2020 மொழியியல் தடைகளை அகற்றுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஒவ்வொருவரையும் எழுத்தறிவு பெற்றவராக மாற்றுவதற்கான நமது முயற்சிகள் உலகளாவிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.

பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார் தமது வரவேற்புரையில், எழுத்தறிவுத் திட்டம் எவ்வாறு 100% எழுத்தறிவை அடைவதை நோக்கமாகக் கொண்டது என்பதையும் புதிய தேசியக் கல்விக் கொள்கையுடன் அது எவ்வாறு இணைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டார். லடாக் யூனியன் பிரதேசம் முழு எழுத்தறிவை (97% க்கும் அதிகம்) அடைந்ததற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...