ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறி உள்ளார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில பா.ஜ., தலைவர் அண்ணாமலை சென்றிருக்கிறார். படிப்பை முடித்த பின்னர் வரும் டிசம்பர் மாதம் சென்னை திரும்புகிறார். இந்நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள 1,345 மீட்டர் உயரம் கொண்ட பென் நெவிஸ் சிகரம் மீது தேசியக்கொடியுடன் அண்ணாமலை ஏறி உள்ளார். இந்த சாதனையை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் போட்டோவுடன் பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவில் அண்ணாமலை கூறி இருப்பதாவது; ஸ்காட்லாந்தில் உள்ள பென் நெவிஸ் சிகரம் பிரிட்டனின் உயரமான சிகரம். இந்த சிகரத்தில் ஏற ஒரு வாய்ப்பு கிடைத்தது. சவாலை ஏற்றுக் கொண்டு உச்சியை அடைந்தேன்.
எனது இந்த சாதனையை நான் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன். அவரின் தொலைநோக்கு பார்வையான மிஷன் லைப் என்பது ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்ட ஒரு பிரசாரம்.
இந்த பயணம் மிகவும் அறிவூட்டுவதாக இருந்தது. எங்கள் பயணம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது. இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான நீடித்த நட்பின் அடையாளமான பென் நெவிஸ் சிகரத்தில் மூவர்ணக்கொடியுடன் ஏறியதில் பெருமை அடைகிறேன்.
இவ்வாறு தமது பதிவில் அண்ணாமலை கூறி உள்ளார்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |