ஹரியானா தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் வாக்களித்து புதிய வாக்களிப்பு சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹரியானாவில் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு ஒரே கட்டமாக இன்று (அக்.5) காலை 7 மணிக்கு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்கியது முதல் நீண்ட வரிசையில் நின்று ஆண், பெண் வாக்காளர்கள் ஓட்டு போட்டு வருகின்றனர்.
இந் நிலையில் பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது;
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த ஜனநாயகத்தின் புனிதமான திருவிழாவில் பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு வாக்காளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளம் நண்பர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |