காங்கிரசை விட நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது -மோடி பேச்சு

‘காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி, சோனாபட் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் விவசாயத்துறையில் ஹரியானா முன்னணி மாநிலமாக மாறி உள்ளது. பா.ஜ., இந்தியாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. சட்டசபை தேர்தலில் பா.ஜ., வை அமோக வெற்றி பெற ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளனர். ஊழல் விவகாரத்தை கர்நாடகா முதல்வர் சித்தராமையா எதிர்கொள்கிறார்.

காங்கிரசுக்கு ஓட்டளிப்பது என்பது ஹரியானாவின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை பணயம் வைப்பதாகும். தவறுதலாகக் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது மாநிலத்தையே அழித்துவிடும். காங்., அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமைதி பிடிக்காது. காஷ்மீரில் மீண்டும் 370வது சட்டப்பிரிவை கொண்டுவர விரும்புகிறார்கள். இடஒதுக்கீடு மீதான வெறுப்பு காங்கிரசின் டி.என்.ஏ.,வில் உள்ளது.

காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது. இன்று எதுவாக இருந்தாலும், அதில் ஹரியானாவின் பங்களிப்பு அளப்பரியது என்று பெருமையுடன் கூறுகிறேன். ஹரியானாவில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாள் நெருங்கி வருவதால், பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...